Friday, May 27, 2016

தமிழருவி மணியனைப் பற்றி நானும் சொல்லத்தான் வேண்டும்: கவிஞர் தணிகை

தமிழருவி மணியனைப் பற்றி நானும் சொல்லத்தான் வேண்டும்: கவிஞர் தணிகை




பொது வாழ்வை நாம் சரியாக செய்திருந்தால் அது நம்மை விட்டு விலகுவதேயில்லை தமிழருவி மணியன். நன்றாக அருவியாகப் பேசுவார். இவரின் பேச்சருவியோடுதான் எனது முதல் புத்தகம் மறுபடியும் பூக்கும் என்ற கவிதை நூல் என்னை கவிஞராக அடையாளப்படுத்திய காலத்தில் இவர் மேட்டூர் தமிழ் சங்கத்துக்கு வந்திருந்தார். அப்போது வெளியிடப்பட்டது.அதற்கு நான் முன் முயற்சி எடுக்காமலேயே ,ஏன் சொல்லப் போனால் கேட்காமலேயே தமிழறினர் கோ.பெ.நா மேட்டூர் முதிய தமிழர் அதை மேட்டூர் தமிழ் சங்கத்தில் வெளியிட ஆவன செய்தார். அது வேறு ஆனால் தமிழருவி மணியன் பொது வாழ்வில்...

இவர் பொது வாழ்வில் என்ன சாதித்தார் என்பது பெரிதாக இல்லை. சில கட்சிகளை இணைக்கிறேன் என முயன்றதும், காந்திய மக்கள் இயக்கம் நடத்தியதும் அதில் செயலாளராக லாயர் தங்கவேல் ஈரோடு இருந்ததும் நாமறிந்ததே.

ஆனால் இந்த ஈரோடு லாயர் தங்கவேல் போன்றோர் எமது இயக்கத்தில் பின் வந்து சேர்ந்தவர். அதாவது : நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம் என்ற இயக்கத்தில் நாங்கள் என்றால் நிறுவனர் கொ.வேலாயுதம், அடியேன், சசிபெருமாள், செம்முனி,சின்ன பையன் போன்றோர் இயங்கும்போதெல்லாமில்லை.இதில் சசிபெருமாளும், சின்ன பையனும் இப்போது உயிருடன் இல்லை.

அது தீவிர வாத இயக்கம் போன்று இருக்கிறது என காந்திய வழியில் ஊருக்கு பத்துப் பேர் இயக்கம் என்ற இயக்கத்தை அடைந்த போது வெகுகாலம் கழித்து தங்கவேல் வழக்கறிஞர் வந்து சேர்ந்தார். பின் இவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் இயக்கம் கட்சி என்றெல்லாம் பேசி விட்டு தமிழருவி மணியனுடன் இணைந்து செயல்பட்டார். பின் தமிழருவி மணியனிடமிருந்தும் பிணக்கு கொண்டு பிரிந்தார்.

தமிழருவி மணியன் சசிபெருமாள் சென்னையில் உண்ணா விரதம் இருந்த போது ஆதரித்து சாலையில் பேசிய ஒளிப்பதிவு  நன்றாகவே இருந்தது. நன்றாக பேசுவார். மற்றபடி பொதுவாழ்வில் புத்தகம் எழுதியிருக்கிறார்

காங்கிரஸ் கட்சி, ஜனதா தளம், ஜனதா கட்சி, லோக் சக்தி, தமிழ் மாநிலக் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை, அதன் பின் காந்திய மக்கள் கட்சி அல்லது காந்திய மக்கள் இயக்கம்.

நாங்கள் கூட : நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்றெல்லாம் செய்து பார்த்தோம். சசிபெருமாளை தலைவராக்கிப் பார்த்தோம், சின்ன பையனை சேலம் வடக்குத் தொகுதி மது விலக்கு வேட்பாளராக 2011ல் நிறுத்தி 800+ ஓட்டு வாங்கி கட்டிய பிணைத் தொகையை இழந்தோம்... இந்த இருவருமே இன்று இல்லை.



இப்போதும் கூட நாமும் ஒரு சேகுவேராவாக, லெனினாக, ‍ஹோசிமின்னாக, மாவோவாக எல்லாம் மலர வேண்டும் என்றெல்லாம் எண்ணுகிறோம்.இந்தியாவில் முடியவில்லை. நமக்கு அத்ந அளவு தகுதி இல்லை என்றே எண்ணுகிறோம். அல்லது இந்தியாவில் கட்சிதான் பெரிது.

ஆனால் அதெல்லாம் கூடி வருமா? எனவே...

சாப்பாட்டு குடிநீருடன் பணிக்கு சென்று பயன்பட முயன்று வருகிறேன். எல்லா இயக்க பணியும் நிறுத்தி. ஆனாலும் இன்றும் பொது மக்கள் குறை தீர்க்கும் பிரிவு என்றும், ‍ஹெல்ப் டெஸ்க் என்றும் முகாம் அலுவலர் என்றெல்லாம் பெயருடன் இருந்தாலும் மக்கள் சேவை தொடர்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

சேவையாளருக்கு ஓய்வு இல்லை. கடைசி மூச்சு வரை.

இலட்சங்களில் வருவாய் ஈட்டுவாரைப் பார்த்து மலைப்பு ஏற்படுகிறது.ஆனால் இலட்சியமும் இலட்சமும் இணைவதில்லை என்ற நேர்த்தியான பதில் எப்போதும் இருக்கிறது. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் வேறு வேறு.

கோடிகளில் கார்கள், நாய்க்கு மின் விசிறி, ஏ.சி, நாய்க்கு உடலுக்கு ஏதாவது என்றால் உடனே மருத்துவ உதவி ஆனால்....மனிதர்கள் நாயை விட கேவலமாக வாழ்நிலையில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

உலகில் இரண்டே இரண்டு சாதி: சுரண்டப் படுவோர், சுரண்டுவோர்,
ஏமாறுவோர், ஏமாற்றுவோர், இருப்போர் இல்லாதோர். என எப்படி பார்த்தாலும் இதில் நான் சுரண்டுப் படுவோர், ஏமாறுவோர், இல்லாதோர் இடத்தில் தான் இருக்கிறேன்.

எனவே எனக்கு அவ்வப்போது மனத் தொய்வு ஏற்பட்டாலும் காலம் தேற்றி விடுகிறது மாமனிதர்கள் வாழ்க்கை மூலமாக. உலகை ஆண்டவர்கள் எல்லாம் செல்வத்தில் உயர்ந்திருந்தார் இல்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




தமிழருவி மணியன் அதில் எங்கிருந்திருக்கிறார் என்பதற்கு நான் ஒரு பைசா கூட இலவசமாகப் பெற்றதில்லை எனச் சொல்லி இருக்கிறார் விவேக் அளித்த பேனாவைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை என்றெல்லாம் படித்தேன். இருந்தாலும் தமிழருவி மணியன் மேல் எனக்கு பெரிய பற்றெல்லாம் வரவே இல்லை. ஏதோ ஒன்று இடிக்கிறது அந்தக் கர கர குரலுடன்...உண்மை இருக்கும் இடத்தில் விரக்தி வர வாய்ப்பு இல்லை.

Wednesday, May 25, 2016

கோயில் கட்டியதை விட பவர் பழனி 10 ஆம் வகுப்பு பாஸ் செய்ய கொஞ்சம் கற்பித்ததில் அதிக மகிழ்வு: கவிஞர் தணிகை.

கோயில் கட்டியதை விட பவர் பழனி 10 ஆம் வகுப்பு பாஸ் செய்ய கொஞ்சம் கற்பித்ததில் அதிக மகிழ்வு: கவிஞர் தணிகை.
\


அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னர் உள்ள தர்மங்கள் யாவும்
பெயர் விளங்க ஒளிர நிறுத்தால்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் ‍ பாரதி மகாக் கவி பாரதி.



பவர் பழனி உங்களுக்குப் பரிச்சயமானவர்தான். எல்லாருக்கும் வேண்டியவர். கல்யாணம், வீட்டு நிகழ்வு, விழாக்கள் யாவற்றிலும் இவரது பாத்திரம், பண்டங்கள் வாடகைக்கு கிடைக்கும், சாமியானா பந்தல் போடுவார், இப்போது கூட பள்ளி ரிசல்ட் 10 வது பாடத்தில் விட்டுப் போன சரித்திர பூகோளத்தில் 62 மதிப்பெண் பெற்று பாஸ் செய்து விட்ட சேதியை உடனடியாக என் காதில் போட்டு விட்டு சாமியானா போடும் நிகழ்வில் இருக்கிறார்.பவர் ஆட்டோ வேறு உரிமயாளராக இருந்து வாடகைக்கு விடும் தொழிலும் செய்கிறார். ஒரு ஓட்டுனருக்கு சம்பளம் அளிக்கும் முதலாளியும் கூட.

அரிசி வியாபாரமும் செய்வார். இவர் நண்பர்கள் 10 பேர் சேர்ந்து நிதி நிறுவனமும் கடந்த ஒராண்டாக நடத்தி வருகிறார்கள். நல்ல இளைஞர் பாட்டாளி மக்கள் கட்சியின் மேல் பற்று கொண்டவர். எல்லாரிடத்தும் நல் மதிப்பு மரியாதையுடன் பழகுவார். புகைக்கும் பழக்கம் விட்டு விடுவேன் என எனக்கு உறுதி அளித்தவர் ஆனாலும் இன்னும் விட்டு விட வில்லை என நம்புகிறேன்.




தந்தையொடு கல்வி போம் என்பார்கள். இவர் தம் சிறு வயதிலேயே தம் தந்தையை இழந்தவர். இப்போது 35 வயது இன்று மணமாகி தாய் மனைவியுடன் குடும்பமாக இருப்பவர். தனது 10 ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் அதாவது சரித்திர பூகோளத்தில் 25 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தவர்.

1996 ல் கோட்டை விட்டவர்,20 ஆண்டு கழித்து தேர்வு எழுதி 2016ல் தேர்வுக் கோட்டை தொட்டு இன்று வெற்றி அடைய அடியேனும் ஒரு தூண்டு கோலாய் இருந்து  படி படி எனத் தொந்தரவு செய்து, அவரும் தமது பல்வேறு பணிகள் நேரமின்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி தப்பித்துக் கொண்டே இருந்தவர் கடைசி ஒரு வாரத்தில் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் மட்டுமே படித்து இப்போது இந்த ஒரு பாடத்தையும் நிறைவு செய்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டார்.நல்ல அறிவாளிதான் சரியாக படித்திருந்தால் 80 முதல் 100 மதிப்பெண் மிகவும் சுலபமாக் எடுத்திருக்கக் கூடியவர்தான்.

இவருக்கு இவர்கள் நிலம் அனல்மின் நிலையத்துக்கு எடுத்துக் கொண்டதற்காக ஈடாக அரசு இவருக்கு அனல் மின் நிலையத்தில் பணி கொடுக்கவும் பணி ஆணை வழங்கி இருக்கிறது என்பதும் இவரைப்பற்றிய செய்திகள்.

என் மகிழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  வாழ்வில் இப்படிப் பட்ட தேன் துளிகள் எனக்கு அவ்வப்போது உண்டு. அவர் இங்கு அமர்ந்து கொண்டு வண்டி ரெடியாக இருக்கிறது பந்தல் பிரிக்கப் போக வேண்டும் என்று அவசரப் படுத்திக் கொண்டிருப்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன்.

தேர்வு எழுதி வெளி வந்த உடனே சொன்னார், சார் நான் பாஸ் மட்டுமில்லை 50 முதல் 60 மதிப்பெண் உறுதி என்றார். ஆனால் இரண்டு  மதிப்பெண் கூடவே வந்து 62 மதிப்பெண் பெற்று இதை என்னை எழுதத் தூண்டி விட்டார். அதே போல இன்று தேர்வு முடிவு வெளி வந்த வுடன் எனக்கு தொலை பேசியில் சொல்லி மகிழ்ந்தார்.

மிகவும் கஷ்டப்பட்டு, கூலி வேலைக்கு எல்லாம் போய், மனம் போன போக்கில் எல்லாம் வாழ்ந்து, இரசாயனத் தொழிற்சாலையில் எல்லாம் பணி புரிந்து அதை எல்லாம் விட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கியே தீருவேன் அதை ஓட்டி முன்னுக்கு வருவேன் என இன்று முதலாளியாக இருக்கும் இவர் செல்வாக்கை விட கல்வியில் தேர்ச்சி அடைந்தது எனக்கு பெரிதும் மகிழ்வடைப்பதாய் உள்ளது.





அவரை விட அவர் நன்றி பாராட்டுதலில் உளம் மிக மகிழ்வதால் இந்த பதிவு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, May 24, 2016

என்று தீரும் கல்விக் கொள்ளை சான்றிதழ் தொல்லை: கவிஞர் தணிகை.

என்று தீரும் கல்விக் கொள்ளை சான்றிதழ் தொல்லை: கவிஞர் தணிகை.




சுமார் 35 வருடங்களுக்கு முன் நானும் இப்படித்தான் அலைந்தேன் பள்ளிப் பருவம் முடித்து கல்லூரிப் பருவம் செல்ல வேண்டுமென. இப்போது எனது மகனும் அலைகிறான். கல்வியின் நிலை மேலும் மாறினாலும், இந்த சான்றிதழ் பெற வேண்டிய தொல்லை அப்படியே இருக்கிறது.

காமராசர் கல்வியை விற்பது என்பது தாய்ப் பாலை விற்பதற்குச் சமம் என்றார். உடனே அந்த படிக்காத மேதையை படித்திருந்தால் தானே அவருக்கு அதன் அருமை தெரியும் என விமர்சித்தார்கள்.

நல்லவேளை சாதி சான்றிதழ் பள்ளீயிலேயே வழங்கி விட்டார்கள். அதே போலவே முதல் பட்டதாரி மற்றும் உதவிகள் பெறுவதற்கான சான்றிதழ்களையும் கல்வியாளர்கள், அரசு நிர்வாக வருவாய் அலுவலர்கள் அந்த அந்த பள்ளியில் அல்லது கல்லூரியில் கிடைக்கச் செய்யலாம்.

அல்லது சில வாரங்களுக்கு கால அட்டவணை இட்டு ஒரு பொது இடம் குறிப்பிட்டு அல்லது கல்யாண மண்டபம் போன்ற இடங்களில் நேரம் குறித்து இதற்கான முகாம் நடத்தலாம். இதெல்லாம் ஏன் இந்த அரசுக்கும் அரசு அலுவலர்களுக்கும் தோன்றுவதில்லை? இப்படி இருந்தால் தான் இவர்களின் அருமை பெருமை எல்லாம் தெரியவேண்டும் என நினைக்கிறார்களா? என்பது தெரியவில்லை.

இ. சர்வீஸ், இ.கவர்னன்ஸ் என்கிறார்கள் ஆனால் அவை எல்லாமே மனித மாமூலாகவே இருக்கிறது. எதெதெற்கு எல்லாம் போராடுவது என்று தெரியவில்லை.

கல்லூரியில் சேர்வதற்கான அதன் கலந்தாலோசனை, விண்ணப்பம்  சென்று சேர வேண்டிய கடைசித் தேதிக்கும் இந்த அரசு அலுவலர்கள் செய்து வரும் காலத் தாமதத்திற்கும் தொடர்பே இல்லாமலிருக்கிறது.

அட வேலையிலேயே இல்லை என்கிறேன் எப்படி வருவாய் இருக்கும் அதற்கு இந்தக் கட்டத்திற்குள் அடைத்து பதில் அளியுங்கள் என்பதெல்லாம் எப்படி பொருந்தும்...காரியம் ஆக வேண்டும் என்றால் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டியே தீர வேண்டும். அவர்கள் கேள்வி கேட்பவர்களாகவும் நாம் அடிபணிபவர்களாகவும் இதென்னய்யா நாடு இதற்கு ஒரு கேடு....



எல்லா வகையிலுமே இடைத்தரகர்களும், தனியார் சார்பாகவே நிலை வகிக்கிற அரசு மக்களரசாக மாறவே போவதில்லை. நாம் அதை பார்க்கவே போவதில்லை.



இவை யாவும் தேவையில்லை என்றால் பணம் தேவை அது கோடிக்கணக்கில் தேவை. அதுவும் இதுவும் எதுவும் இல்லார்க்கு இங்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை.

is it called Right to Education?
Is it called Right to get Employment?
India and Tamil Nadu at Cross roads...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, May 22, 2016

உண்மையோ இல்லையோ கடவுளுக்கே வெளிச்சம்

thanks to Praveenkumar



3 கண்டெய்னர்களில் சிக்கி ரூ. 570 கோடி எனக் குறைவாகக் கூறப்படும் 5000 கோடி பிடிபட்டவுடன் டாஸ்மாக் ராணி பேரதிர்ச்சியில் உறைந்து விட்டாராம். அதனால்தான் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு ஓடினாராம்.
கோவத்தில் அண்டா, குண்டா எல்லாம் பறந்ததாம். இந்த பணத்தை விடுவிக்க மத்தியில் உள்ள இட்லியை தோழி தொடர்பு கொண்டு பணத்தை விடுவிக்க கெஞ்சோ கெஞ்சன கெஞ்சினாராம்.
இட்லி 
பிடிபட்ட 3கன்டைனர்களிலும் 
ஹைதராபாத் தோட்டத்தை அடைந்த 7 ஆக மொத்தம் 10 கன்டைனர்களிலும் 30% பெர்செண்ட் கமிசனாக தரவேண்டும் என்று ஒற்றை காலில் நின்றதாம்.
மேலும் டாஸ்மாக் ராணியின் 37 அடிமைகளும் வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லா மசோதாக்களுக்கும் கண்ணைப் பொத்திக் கொண்டு ஆதரவு தரனும்னு எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டாராம் இட்லி.
ஏற்கனவே 7 கண்டெய்னர்கள் பாதுகாப்பாக போய் விட்டதால், அதில் கமிஷன் தரமுடியாது என்றும் இந்த 3 கன்டைனரில் உள்ள 5000 கோடியில் sbiக்கு 570 கோடி போக மீதி 4230 கோடியில் 30 % தருவதாக ராணி ஒத்துக் கொண்டாராம்.
ஆரம்பத்தில் இட்லி 7 ஐ நீங்கள் அமுக்கி விட்டீர்களே இந்த மூன்றை முழுமையாக தந்தால் தான் 
பெயர் வெளியில் தெரிந்து விடாது ஏற்பாடுகள் செய்வேன் என பிடிவாதம் செய்தாராம்.
இட்லியை 30% க்கு இழுத்து வரத் தான் 10 மணி நேரம் ஆச்சாம், பேங்க் அதிகாரிகளை வழிக்கு வரவைக்கவும்
அதற்குண்டான ஆவணங்களை தயார் செய்ய போதுமான அவகாசம் வேண்டி வந்ததாம்.
இந்தப் பணம் அந்த குறிப்பிட்ட வங்கிக்கு தான் சொந்தம் என்று சொல்ல வைக்க பெரும் பேச்சு வார்த்தையும் கமிசனும் பறி மாறபட்டதாம.
உலகம் சுற்றும் சுற்றுலா பயணிக்கு தெரிந்தே இட்லி இந்த வேலையை செய்து முடித்தாராம்..
தற்போது தே.கோமிசன் வாயாலே இது அந்த வங்கிக்கு சொந்தமானது என்று சொன்ன பிறகுதான் தலைவிக்கு நிம்மதி பெருமூச்சு வந்ததாம்.
ஊருக்குள்ள பேசிக் கிட்டாங்க...


marubadiyum pookkumvarai
Kavignar Thanigai.

I received this by via mail...May 17th. to day only I have seen so now only able to post it.

எப்போதும் செல்லாத ஓட்டு இப்போதும்: கவிஞர் தணிகை

எப்போதும் செல்லாத ஓட்டு இப்போதும்: கவிஞர் தணிகை



132 ஆளும் கட்சி தமிழக எம்.எல்.ஏக்களில் 32 பேர் மந்திரிமார்களாகிறார்கள். அவர்கள் தவிர்த்து 100 பேர் எம்.எல்.ஏ அவர்களுக்கும் அந்த வாரியம் இந்த  வாரியம், நொந்த வாரியம், கூட்டுறவு மாற்று உறவு எல்லாம் கிடைக்கும் அவர்கள் பெற்றது சுமார் 40 சதவீதம் வாக்குகள். மொத்தத்தில்26 சதவீத மக்கள் வாக்களிக்கவே வரவில்லை.நோட்டா தி.மு.க போன்ற எதிராக இருக்கும் வாக்குகளின் சதவீதம் 60 சதவீதம்.

ஆனால் நீங்கள் நன்றாக கவனியுங்கள் இனி இந்த மாற்றுக் கட்சி எம்.எல்.ஏக்களின் அல்லது தமிழகத்தின் பாதிக்கும் மேலான தொகுதிகளுக்கு அம்மாவின் திட்டங்கள் சென்று அடைவது கேள்விக்குறிதான். கேலிக்குறிதான்.

எனது எப்போதும் கேட்கப்படும் கேள்வி ஜனநாயகத்தில் 40 சதவீதம் எல்லா அரசு உதவிகளும் பெற 60 சதவீதம் புறக்கணிக்கப்படுவதும் அல்லது குரல் முடக்கப்படுவதும்தான் மக்களாட்சியா? இந்த பதவியில் ஏறிக் கொள்வோர் சொல்லே அம்பலத்தில் ஏறும். அவர்கள் அக்கமே குடை சாயும் திட்டம் நிறைவேறும். அவர்கள் சார்பாகவே எல்லாம் நடைபெறுமென்பதுதான் ஜனநாயகத் தத்துவமா?

எனவே ஆளும் கட்சிக்கு எதிராக அல்லது சார்பாக இல்லாத மக்களின் வாக்குப் பிரதிநிதித்துவம் யாவுமே அது எவ்வளவு எண்ணிக்கையில் பிரதானமாக இருந்த போதும் செல்லாதவையே.பயனில்லாதவையே. அப்படித்தான் இந்தக் கட்சி ஆட்சி முறைகள் சொல்லி வருகின்றன. செய்து வருகின்றன.

கோடீஸ்வரர்கள் தங்களை மேலும் கோடீஸ்வரர்களாக்க பாதை அமைத்துக் கொண்டார்கள். அதற்கு அடித்தளமே இந்த தேர்தல். அதற்கு வழி அமைத்துத் தந்தவர்களே நமது வைகோ, விஜய்காந்து, தொல் திருமா, கம்யூனிஸ்ட் பாண்டிகள், பா.ம.க, எல்லாமே...

நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்.எல்.ஏக்களில் 76% கோடீஸ்வரர்களே. அம்மாவையும் சேர்த்து. இந்த கோடீஸ்வர எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம். அம்மாவின் சிண்டு பி.ஜே.பியிடம் உச்ச நீதி மன்றத்தில் ...ஆனால் அம்மாவின் சப்போர்ட் பாராளுமன்றத்தில் பி.ஜே.பிக்கு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தேர்தல் மற்றும் இன்ன பிற மசோதா தாக்கல்களின் போதெல்லாம் பரஸபரம் தேவை. எனவே இருவரும் பரிமாறிக்கொள்வார்கள். வழக்கம்போல துணை இணை பதவிகள் தமிழகத்துக்கும் அம்மாவின் கட்சிப் பிரமுகர்களுக்கும் கிடைக்கும்.அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்.

கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்,குற்ற வாளி எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் இவர்களுக்கு எல்லாம் ஏழை படும் பாடு தெரியும் என்கிறீர்களா? அவர்கள் கஷ்டம் உணர்வார்களா?



மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே இருக்க உதவிடும் தேர்தல்கள் பாலமிடும் மது  வாக்கு வங்கி, வாக்கு விற்பனை...வாக்கு விலை மிக மலிந்து விட்டது ஒரு வாக்கு விலை மதிப்பு ரூ. 200க்கும் குறைந்து விட்டது.

கிணற்றுத் தவளைகளுக்கு கிணறே பெரிய உலகம்

இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் ...

தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் அயோக்யர் என்றால்
தேர்ந்தெடுப்பவர் முட்டாள் ‍‍‍ பெரியார்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பதவி ஏற்காமல் ராஜினாமா செய்வார்களா தி.மு.க அணியினர்? : கவிஞர் தணிகை

பதவி ஏற்காமல் ராஜினாமா  செய்வார்களா தி.மு.க அணியினர்? : கவிஞர் தணிகை




தேர்தலில் ஜெயித்த தி.மு.க அணியினர் அனைவருமே மறு தேர்தல் நடத்தக் கோரி பதவி ஏற்காமல் பணநாயகத் தேர்தல் எதிர்த்து போராடும் முகம் தங்கள் பதவியை உதறி எறிவார்களா?

உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்வார்களா?

தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு மறு தேர்தல் கோருவார்களா?

குடியரசுத் தலைவரிடம் சென்று முறையிடுவார்களா?

தமிழ் நாட்டில் ஒரு நல்ல அரசியல் விழிப்புணர்வுக்காக மறு தேர்தல் நடத்த மக்களிடம் சென்று மாநிலமெங்கும் போராட்டம் நடத்துவார்களா?

அரசு அலுவலகங்கள்,மாநில மத்திய அலுவலகங்களை முற்றுகை போராட்டம் நடத்துவார்களா? சசி பெருமாள் போல இலக்கு நோக்கி சாகும் வரை செல்வார்களா?



அதுவும் இன்னும் சில நாட்களிலே, அல்லது உடனே, அல்லது பதவி ஏற்பு வைபவத்துக்கு முன்பே இவர்களால் செய்ய முடியுமா?

அப்படி எல்லாம் செய்தால் நாட்டில் ஒரு அலை பரபரப்பு ஏற்படும். நாடே திரும்பி பார்க்கும், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம்,பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலவர் அலுவலகம் யாவுமே இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் எனச் செய்வார்களா? நினைத்தால் செய்ய முடியும். ஆனால்..

அதெல்லாம் இவர்களால் முடியாது.




ஏன் எனில் இவர்கள் இவ்வளவு தொகுதிகள் பெற்றதே பெரிது என்று எண்ணுகிறார்கள். எதிர்க்கட்சி அந்தஸ்தும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எம்.எல்.ஏ பதவியும் இவர்களுக்கு போதும்.

ஏன் எனில் இவர்களும் வாக்குக்கு பணம் கொடுத்துள்ளார்கள். சில இடங்களில் கொடுக்க வில்லை...கொடுக்காத இடங்களில் தோற்றுள்ளார்கள்.

எல்லாக் கட்சிகளுக்கும் இந்த தேர்தல் பல பாடங்களைக் கற்பித்துள்ள  நிலையில் தி.மு.க என்னும் பிரதான எதிர்க்கட்சிக்கும் நல்ல பாடம் கற்பித்துள்ளது.




பிரித்தாளும் சூழ்ச்சி அல்லது கொள்கையில் ஆளும் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது அதே சிங்கம் நாலு மாடுகள் கதைதான். நரிதான் யார் என்று தெரியவில்லை. ஆனால் திட்டம் வெற்றி அடைந்து விட்டது. அதுவே சரித்திரம் சாதனை என்றாகிவிட்டது. அதற்கு பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கோடி இந்திய பணம் அடித்தளம் ஆகியிருக்கிறது. இந்திய ஜனநாயகம் தமிழகத் தேர்தலில் மதுவுடனும், மாதுவுடனும், பணத்துடனும் போகத்துடனும் போதையுடனும் மடிந்து போய்விட்டது.

என்றுதான் எழுச்சி வருமோ? எமது குடிமகன்  கட்டிய லுங்கி இடுப்பில் இல்லாதிருப்பது அறியாமல் உள்ளாடை தெரிய உயிர் நிலை தெரிய தெருவிலும் சாலையிலும் குடித்து மயங்கிக் கிடக்கும் நிலை காட்சியில் இல்லாமல் போகுமோ? இயற்கை மக்கள் செய்யாததை செய்யட்டும்.

நடந்தது தேர்தலா? பணமே வாக்குக்கு கொடுக்கப்படவே இல்லையா?
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

http://marubadiyumpookkum.blogspot.in/2016/05/blog-post_28.html

Friday, May 20, 2016

பதவி ஏற்காமல் ராஜினாமா செய்வார்களா தி.மு.க அணியினர்? : கவிஞர் தணிகை

பதவி ஏற்காமல் ராஜினாமா  செய்வார்களா தி.மு.க அணியினர்? : கவிஞர் தணிகை




தேர்தலில் ஜெயித்த தி.மு.க அணியினர் அனைவருமே மறு தேர்தல் நடத்தக் கோரி பதவி ஏற்காமல் பணநாயகத் தேர்தல் எதிர்த்து போராடும் முகம் தங்கள் பதவியை உதறி எறிவார்களா?

உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்வார்களா?

தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு மறு தேர்தல் கோருவார்களா?

குடியரசுத் தலைவரிடம் சென்று முறையிடுவார்களா?

தமிழ் நாட்டில் ஒரு நல்ல அரசியல் விழிப்புணர்வுக்காக மறு தேர்தல் நடத்த மக்களிடம் சென்று மாநிலமெங்கும் போராட்டம் நடத்துவார்களா?

அரசு அலுவலகங்கள்,மாநில மத்திய அலுவலகங்களை முற்றுகை போராட்டம் நடத்துவார்களா? சசி பெருமாள் போல இலக்கு நோக்கி சாகும் வரை செல்வார்களா?



அதுவும் இன்னும் சில நாட்களிலே, அல்லது உடனே, அல்லது பதவி ஏற்பு வைபவத்துக்கு முன்பே இவர்களால் செய்ய முடியுமா?

அப்படி எல்லாம் செய்தால் நாட்டில் ஒரு அலை பரபரப்பு ஏற்படும். நாடே திரும்பி பார்க்கும், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம்,பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலவர் அலுவலகம் யாவுமே இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் எனச் செய்வார்களா? நினைத்தால் செய்ய முடியும். ஆனால்..

அதெல்லாம் இவர்களால் முடியாது.




ஏன் எனில் இவர்கள் இவ்வளவு தொகுதிகள் பெற்றதே பெரிது என்று எண்ணுகிறார்கள். எதிர்க்கட்சி அந்தஸ்தும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எம்.எல்.ஏ பதவியும் இவர்களுக்கு போதும்.

ஏன் எனில் இவர்களும் வாக்குக்கு பணம் கொடுத்துள்ளார்கள். சில இடங்களில் கொடுக்க வில்லை...கொடுக்காத இடங்களில் தோற்றுள்ளார்கள்.

எல்லாக் கட்சிகளுக்கும் இந்த தேர்தல் பல பாடங்களைக் கற்பித்துள்ள  நிலையில் தி.மு.க என்னும் பிரதான எதிர்க்கட்சிக்கும் நல்ல பாடம் கற்பித்துள்ளது.




பிரித்தாளும் சூழ்ச்சி அல்லது கொள்கையில் ஆளும் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது அதே சிங்கம் நாலு மாடுகள் கதைதான். நரிதான் யார் என்று தெரியவில்லை. ஆனால் திட்டம் வெற்றி அடைந்து விட்டது. அதுவே சரித்திரம் சாதனை என்றாகிவிட்டது. அதற்கு பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கோடி இந்திய பணம் அடித்தளம் ஆகியிருக்கிறது. இந்திய ஜனநாயகம் தமிழகத் தேர்தலில் மதுவுடனும், மாதுவுடனும், பணத்துடனும் போகத்துடனும் போதையுடனும் மடிந்து போய்விட்டது.

என்றுதான் எழுச்சி வருமோ? எமது குடிமகன்  கட்டிய லுங்கி இடுப்பில் இல்லாதிருப்பது அறியாமல் உள்ளாடை தெரிய உயிர் நிலை தெரிய தெருவிலும் சாலையிலும் குடித்து மயங்கிக் கிடக்கும் நிலை காட்சியில் இல்லாமல் போகுமோ? இயற்கை மக்கள் செய்யாததை செய்யட்டும்.

நடந்தது தேர்தலா? பணமே வாக்குக்கு கொடுக்கப்படவே இல்லையா?
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பண நாயகம் வென்றது ஜனநாயகம் தலை குனிந்து நின்றது: கவிஞர் தணிகை

பண நாயகம் வென்றது ஜனநாயகம் தலை குனிந்து நின்றது: கவிஞர் தணிகை



ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியவர்களுக்கு நல்ல சாவே வராது. இது நாடா? இதற்கு ஒரு கேடாய்...மதுக்கடையை எடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் அதற்கு எதிராக‌ மது அடிமைகள் போட்ட போதை ஓட்டு இந்த தேர்தலை அதிகம் பாதித்திருக்கிறது.

500 முதல் 5000 வரை ஓட்டு வித்தியாசத்தில் தான் ஆளும் கட்சி நிறைய இடங்களில் வென்றிருக்கிறது. ஒரு இடத்தில் 40 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க தோற்றிருக்கிறது. தொல் திருமாவளவன் 87 வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார்.

தேர்தலுக்கும் முன் சென்ற விஜய்காந்தின் சிங்கப்பூர் பயணமும், வைகோவும் இந்த தேர்தல் முடிவில் முக்கிய பங்கெடுத்து தமிழக அரசியலை நாசம் செய்து தமிழகத்துக்கு தலை குனிவை ஏற்படுத்தி பணநாயகம் வெல்ல வழிகாட்டியிருக்கிறார்கள்.அந்த இகழ் எப்போதும் இனி தரித்திர தமிழகத்தின் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கும்.

கேடு கெட்ட அழகிரி அ.இ.அ.தி.மு.கவுக்கு வாக்களியுங்கள் எனச் சொல்லி விட்டு தி.மு.க தென்பகுதிகளில் நான் இருந்திருந்தால் வென்றிருக்கும் இந்த தோல்விக்கு யார் காரணம் என பிதற்றியிருப்பது அவரது சுயநலத்தை பளிச் என படம் போட்டுக் காட்டி இருக்கிறது. அவர் இல்லாமலே கட்சி நல்ல நிலைமைக்கு வந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது.

ராஜேஸ் லக்கானி விலைக்கு வாங்கப்பட்டு விட்டார் என்ற பேச்சும், தேர்தல் முடிவு வரும் முன்பே தலைமைச் செயலரை அழைத்து முதல்வர் மறு பதவி ஏற்புக்கு ஏற்பாடு செய்யச் சொன்னது எப்படி எனத் தெரியவில்லை. இந்த செய்தியை எமது நண்பர் ஒருவர் இது பற்றி சவுக்கு சங்கர் தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும் பாரதீய வங்கியின் 570 கோடி பிடிபட்டதாகச் சொல்லும் வாகனங்கள் உண்மையான பதிவு எண்ணுடன் பயணம் செய்யவில்லை என்பதும் உரிய ஒரிஜினல் ஆவணங்கள் இல்லை என்பதும், பா. சிதம்பரம்  நாட்டின் நிதி மந்திரி பொறுப்பை பல்லாண்டு வகித்தவரே இப்படி எல்லாம் மிகுந்த எண்ணீக்கையிலான தொகை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றப்படுவது வழக்கத்தில் இல்லை என கருத்துரைத்திருப்பது கவனிக்கத் தக்கது.

மோடி மந்திரமும் இடையே தமிழகத் தேர்தலில் இடையே ஊடாடி இருக்கிறது எனச் சொல்லப் படுகிறது.

ஆரம்பத்தில் இருந்தே இந்தக் கட்சிகளின் பிரிவினை மந்திரம் தந்திரமாக பணத்தின் வல்லமையால் மாற்றப்பட்டிருக்கிறது. வைகோ விஜய்காந்த் போன்றோர் வலையில் கம்ப்யூனிஸ்ட் கட்சிகளும், வி.சி. க போன்ற கட்சிகளும் கருவறுக்கப்பட்டுள்ளன.

மேலும் பா.ம.க வாக்கு சதவீதத்தில் 5 சதத்துக்கும்மேல் வந்து விட்டது. பா.ஜ.கவை விட டெபாசிட் போய் தோல்வி அடைந்த விஜய்காந்த் கட்சி கடந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தது இம்முறை வினை விதைத்தவன் வினைஅறுப்பான் என அறுபட்டிருக்கிறது/ இந்த கேப்டனைத்தான் கலைஞர் கருணாநிதி கெஞ்சிக் கூத்தாடி அழைத்திருந்தார் கூட்டணிக்கு.

காங்கிரஸ் கட்சி இல்லாமலே  தி.மு.கவும் அ.இ.அ.தி.மு.கவுக்கு எதிரான மாற்று அணியாக நின்றிருந்தால் இன்னும் தொகுதிகள் பெற்றிருக்கும் என பேச்சுகள் இருக்கின்றன.

தேர்தல் ஆணையம் எல்லாம் நன்றாக செய்வது போல நடித்துவிட்டு பணப் பட்டுவடாவில் கண்டும் காணாமல் , தெரிந்தும் தெரியாமல் நடந்து  கொண்டிருக்கிறது ஒரு பாடம்.

இனி தேர்தல் நடத்துவது என்றால் ஆளும் கட்சி காலம் காலாவதி ஆன உடன் மத்திய ஆளுகை ஆளுஞர் ஆட்சி வைத்துக் கொண்டு அந்தக்  காலக்கட்டத்தில் எந்த கட்சிக்கும் சாதக பாதகம் இல்லாமல் தேர்தல் நடத்துவதென்றால் நடத்த வேண்டும் இல்லையேல் தேர்தல் முறைகள் விகிதாசாரம், ஜனநாயகம், திரும்ப அழைக்கும் உரிமை போன்றவை வரவேண்டும். நோட்டாவுக்கு 1.8 சதவீதம் அல்லது 5 இலட்சத்துக்கும் மேல் வாக்களிக்கப்பட்டுள்ளது பற்றி பரிசீலிக்க வேண்டும். வாக்களிக்காதவர்கள், வென்றவருக்கு எதிராக விழுந்த வாக்குகள் ஆகியவை பற்றி கவனிக்குட்படுத்தப் பட வேண்டும்.

வாக்கு எந்திரங்களே ஆளும் கட்சிக்கு ஆதரவாக மாற்றப்பட்டு எண்ணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்ற செய்திகளும் இல்லாமல் இல்லை. அட்டையில் அ.இ.அ.தி.முகவுக்கு சின்னத்துடன் வாக்கு எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டது பிடிபட்டுள்ளன.

அனேகமாக உச்ச நீதிமன்றமும் இப்படியே ஏமாற்றும் என நம்புவோமாக.

ஒரு நண்பர் காத்திருக்கிறார்.
மறுபடியும் சந்திப்போம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, May 16, 2016

2016 மே‍ 16 தமிழகத் தேர்தல் திருநாள்: ஜனநாயகக் கோடுகளும் கேடுகளும்: கவிஞர் தணிகை

2016 மே‍ 16 தமிழகத் தேர்தல் திருநாள்: ஜனநாயகக் கோடுகளும் கேடுகளும்: கவிஞர் தணிகை




திருவண்ணாமலையில் அ.இ.அ.தி.மு.கவும் தி.முகவும் மோதல் 3 பேர் மண்டை உடைந்தது, கோவையில் அ.இ.அ.தி.முகவும் பாஜகவும் மோதல் கார் கண்ணாடி உடைந்தது...தேர்தல் திருவிழா நோம்பிக்காசு போல 200 ரூபாய் முதல் 7000 வரை இடத்துக்குத் தக்கபடி பட்டுவடா.கள்ளச் சந்தையில் மதுவின் விற்பனை அமோகம்.இன்னும் சில‌

1.3 நாள் மதுக்கடைக்கு விடுமுறை தேர்தலுக்காக என்றார்கள்.ஆனால் விடுமுறை நாள் ஒன்றுக்கு ஒரு கோர்ட்டர் வீதம் வழங்கலாம் என்றது தேர்தல் ஆணையம் அதை மீறி இன்று கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகம் என்று செய்திகள் வருகின்றன.. தேர்தல் பிரச்சார நாட்களில் மது விற்பனை சுமார் 40 சதவீதம் அதிகம் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன.தேர்தல் ஆணையம் அதை ஒப்புக்கொண்டுதான் தேர்தல் ஒழுங்காக அமைதியாக நடக்க வேண்டுமானால் மதுக்கடை விடுமுறை வேண்டும் என 3 நாள் மூடியது. பயனில்லை.தமிழ‌கத் தேர்தல் நிலை பாரீர்.

2. இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்பது போலவே வாக்குக்கு காசு வாங்கினால் 2 ஆண்டு சிறை என்றது தேர்தல் ஆணையம். கொடுப்பவர்க்கு எத்தனை ஆண்டுகள் என்ன நடவடிக்கை என்று சரியாகத் தெரியவில்லை.ஜனநாயகம் நிர்வாணப்பட்டு கற்பிழந்து மானமிழந்து அவமானப்பட்டு துணி அவிழ்க்கப்ட்டு முச்சந்தியில் சிரித்துக் கிடக்கிறது. சிரிக்கக் கிடக்கிறது. எத்தனை வாங்கிய பேரையும் எத்தனை கொடுத்த பேரையும் சிறைக்கு அனுப்பியது இந்த அரசும் தேர்தல் ஆணையமும் எனத் தெரியவில்லை.ஜனநாயகத் தேர்தல் நிலை பாரீர்.

3. எமது வீதி வரை பணம் பாய்ந்தது உண்மைதான். ஆனால் வாங்கியவரும் கொடுத்தவரையும் நம்மால் நிரூபிக்க முடியாது. ஏன் எனில் இலஞ்சம் கொடுத்து இலஞ்சம் வாங்கிய போது எப்படி அதை நிரூபணபடுத்த முயன்று நாம் அவமானப் பட்டு நின்றோமோ அதே அனுபவம் இதிலும் ஏற்படும் . ஜனநாயகம் பாரீர்.

4. முகநூலில் தேர்தல் அலுவலர் முன் ஒரு வேட்பாளர் குமுறுகிறார் நான் என்ன முட்டாளா கிழவிகளின் காலில் எல்லாம் விழுந்தபடி இருக்க இவங்க 2 கட்சியினரும் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விட்டால் என்ன இது ஜனநாயகம் என கேட்கிறார், காவல் துறையையும் சேர்த்து ஏசுகிறார். இது வரை என்ன நடவடிகை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது எமது உசிதமான புகாருக்கு என கர்ஜிக்கிறார். அரசு அலுவலர் பேசாமல் மௌனமாக இருக்கிறார்.பண நாயகம் பாரீர்.

5. தேர்தல் ஆணையம் 50 % வெற்றி பெற்றிருக்கிறது சுவர் விளம்பரம்,சத்தம், ஆர்ப்பாட்டம், கொடிகள் கம்பங்கள், பூத் சிலிப் தருதல்,போக்குவரத்து இடைஞ்சல் போன்றவையுடன் ப்ளக்ஸ் கலாச்சாரம் போன்றவை முற்றிலும் தடைப் படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் பணப்புழக்கத்தை அதனால் பெரிதும் தடை செய்ய இயலவில்லை. செயல் பாடின்மை பாரீர்.

6. மகன் மணியத்தையும் அவரது நண்பர் ஒருவரையும் தமது வாகனத்தை நிறுத்தி மேட்டூர் கோட்டாட்சியர் வாக்குக்கு பணம் அளிக்கிறார்களா எனக் கேட்டிருக்கிறார். அவர் அய்யா எனக்கு வாக்கு இல்லை அது பற்றி ஏதும் தெரியாது என மறுமொழி கொடுத்து வந்தார்.முயற்சிதான்... ஆனாலும் பாரீர்.

7. தேர்தல் முடியும் வரை மின் நிறுத்தம் இருக்கக் கூடாது என அரசை கண்டிப்புடன் வலியுற்த்தியது தேர்தல் ஆணையம். ஆனால் இன்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை எமது ஊரில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.ஆணை எப்படி நடைமுறைப்படுத்தப் படுகிறது என்று பாரீர்...



திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

பெரியார் சொன்னபடி

அயோக்யன் தேர்ந்தெடுக்கபடுகிறான் எனில்
தேர்ந்தெடுப்பவன் முட்டாள் ....உண்மைதானே!

ஒழுக்கமில்லா ஜனநாயகம், கட்டுப்பாடில்லா சுதந்திரம், தியாகமில்லா சாதனைகள்...ஒரு நாட்டை விளங்க வைக்காது...தத்துவ மேதை டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்...

ஒரு பொதுக் குடி நீர்க் குழாயில் தனி நலம் பாராட்டி எவரும் தமது வீட்டுக்கு நீளமான (ஹோஸ்) குழாய் போட்டு நீர் ஏற்றிக் கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி செயல்படுத்த படாத பாடு பட வேண்டியிருக்கிறது. அதற்கும் கூட கண்குத்திப் பாம்பாக உறங்காமல் இருக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுப்பாடில்லா நாட்டில் ஒழுக்கம் இல்லா நாட்டில், தியாகம் இல்லா நாட்டில் எந்த நல்லதையும் செய்வது மிகக் கடினமானது.

வெகு ஜனவாதி பொது ஜன விரோதி.பொது ஜனவாதி வெகு ஜன விரோதி.

காமராசர் முதல்வராக இருக்கையிலேயே தமது தாய்க்கும் கூட ஊராட்சி குடி நீர்க் குழாயை தமது வீட்டு வாயில் முன் புதிதாக போடப்பட்டிருந்ததை அனுமதிக்கவில்லை...

அது போன்ற புண்ணீய புருசன்கள் பிறந்த நாட்டில் இந்த அவலங்கள் இப்படிக் கேடுகள்...

அய்யா இந்த தேர்தல் இவ்வளவு ஜனநாயக நசுங்கல்கள் கசங்கல்களுக்கு இடையே நடந்த போதும் ஆளும் கட்சி தூக்கி எறியப் பட்டால் அது எமக்கு மகிழ்வே.

அடுத்த தேர்தல் விழா ஊராட்சி, நகராட்சி இன்னும் ஓராண்டில் அதை அடுத்து பாராளுமன்றத்திற்கு. அடுத்து சட்டமன்றத்திற்கு அடுத்து ....இப்படியே போய்க் கொண்டே இருக்கும் இந்தத் திருநாள்கள்....ஜனநாயகம் ....தேர்தல் ஆணையம் தம் பணியில் ஒவ்வொரு படியாய் மேல் ஏறிக் கொண்டிருக்கட்டும்... நாமும் இருக்கும் வரை பேசுவோம். எழுதுவோம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Sunday, May 15, 2016

பாலை வனச் சோலையில் கொஞ்சம் கொஞ்சும் சாரல்கள்:கவிஞர் தணிகை

பாலை வனச் சோலையில் கொஞ்சம் கொஞ்சும் சாரல்கள்:கவிஞர் தணிகை




தகித்த வெயிலில் பச்சை செடி கொடி இலைகள் யாவும் தாகத்தில் கிடக்க ஒற்றை ரோஜா மட்டும் சிலிர்த்துக் கிடந்தது.காதலுக்கும் கவிதைக்கும் நிரந்தர ஓய்வு இல்லை.அவ்வப்போது பூக்கிறது நினைவைக் காய்க்கிறது. நடைமுறைக்கு சாத்தியமில்லாதபோதும். நதி ஜீவ நதியாய் வலைந்து வளைந்து வளர்ந்து ஓடியபடியே....

எங்கும் பச்சையாய் இருக்க இளஞ்சிவப்பு நிறம் தனித்துத் தெரிந்தது.விழிகள் சாளரங்கள், இமைகள் கதவுகள். நெஞ்சில் ஓடும் நினைவு மின்சாரம் இருவரையும் உள்ளுணர்வால் இருவரையும் பிணைக்க சுமார் ஒரு மணி நேரம் 60 மணித் துளிகள் 360 நொடிப் பொழுது கண நேரத்தில் இருவரும் சேராமலே சேர்ந்திருந்தார்கள்.

பார்க்காமலே பார்த்து வந்தார்கள். ஓர விழிகளில் பார்த்த அவள் நேர் பார்வைக்கு வருமுன்னே விலக்கிக் கொண்டார் அவர் இது எந்த விதியிலும் சேராத விதையாய் இருக்கிறதே என. பக்கத்தில் கனமான அவள் தாய் பாதுகாப்பாய் அமர்ந்திருந்தார். பல அடிகள் இடைவெளி இருந்தபோதும் இருவருமே மிக அருகே அந்தக் கணங்களில் வாழ்ந்து வந்தனர். அவளது சிரிப்பு, புருவ வலை, முகம் சாயும் கவிதை, இதழ்கள் யாவும் மனப்பாடமாகியிருந்தது இவருக்குள்.மனிதப் பதர்கள் சுற்றி இருக்க ஒரு செடி முளை விட்டிருந்தது.



எண்ண வலிமை என்னவோ செய்ய அடிக்கடி பார்த்துக் கொண்டார்கள். ஆனால் விழிகள் மூலம் பார்வையை கோர்த்துக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்தார்கள். அங்கே அந்த இருவருக்குள்ளும் ஒரு பொதுப்புலம் ஏற்பட்டிருதது எந்த வித ஒற்றுமையும் இருவருக்கும் இல்லாமலே...

அழகு என்றால் அப்படி ஒரு அழகு. முகம் தானே மனத்தின் முன் வாசல் ...சூரியானாக சுடர் விட்டபடியும் அதே நேரத்தில் ஒரு குளிர்ச்சியுடனும்...இப்படி எல்லாம் பார்க்கக் கூடாதுதான் நெறி இல்லைதான். ஆனாலும் முகமும், விழிகளும் பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது .வாய்ப்பு தூண்டுகிறது.





(இதெல்லாம் கேவலமானது என மறைகள் சொல்லும், தம்பியும் சொல்வார், ஆனால் முறைகள் வேறாக சொல்கிறதே. கண்கள் தவறு செய்தால் கண்களைப் பிடுங்க வேண்டும் ஆனால் ஒரு அழகிய பூவை பார்த்து இரசிப்பதில் முறைகேடான தவறுகள் ஏதும் நேர்ந்து எதுவும் முறிந்து விடப் போவதில்லைதான்..இதை எல்லாம் எவருக்கும் புரியவைக்கவோ உணர்த்தவோ வேண்டிய அவசியமே இல்லை.) ஆனால் இதெல்லாம் தான் எழுத்து, இலக்கியம். கவிதை, காவியம். இயற்கை என்றால் அது சரி. மனிதர் என்று வந்து விட்டால் அது தவறு. உறவுக்கு ஊறு விளையாமல் விளைக்காமல் விட்டு விடுவதும் கொச்சைப் படுத்தப் பட வேண்டிய மனித எச்சம்தானா?

ரேபானுக்குள்ளிருந்து அவர் விழிகள் அடிக்கடி அங்கு சென்றதை அருகே நின்று கொண்டிருந்த ஓரிருவர் கவனித்ததை அறிந்த அவர் நாகரீகமாக நடந்து கொள்வதாக பார்வையை விலக்கிக் கொள்வதாக பாசாங்கு செய்து நடித்துக் கொண்டிருந்தார்.


ரஜினிகாந்த்,பார்த்திபன் போன்ற கருத்த நடிகர்களை சிவந்த நடிகைகள் நாயகர்களாக ஏற்றுக் கொண்டது இடைக்காலத்தில்  அதிகமாக அழகிய பெண்கள் நிறமில்லாத ஆண்களை எல்லாம் கூட ஏற்றுக்கொண்டதை சினிமா ஒரு துருப்புச் சீட்டாக்கிக் கொண்டது.சமுதாயத்திலும் நடைமுறையிலும் அப்படிப்பட்ட மாறுதல் நிறைய நேர்ந்து விட்டதாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அது போல இது எதற்கும் உட்பட்டதல்ல.

இந்தியா மேலை நாடுகள் வரிசையில் இனி பருவம், வயது தாண்டியும் காதல் செய்ய ஆரம்பித்துவிட்டது. (காதல் என்ற வார்த்தை சரிதானா? சரியான பொருள் கொண்டதா? இதற்கு என்ன பெயர் தமிழில் உள்ளது?)இவருக்கு இடம் கிடைத்து 15 நிமிடங்கள் ஆகி  வாகனத்திலிருந்து இறங்கி இருப்பிடம் வருமுன் கடைசி இருக்கைக்கும் முன் இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த‌ அவளை முன் வாசல் வழி இறங்கி பின் வருகையில் ஒரு சிறு பொறி பார்வையில் பார்க்க அவளும் பார்த்தபடியே இருந்து விடைபெற்றுக் கொண்டனர். இனி வாழ்வில் அவர்கள் சந்தித்துக் கொள்ளப் போவதே இல்லை. என்றாலும் நினைத்துக் கொள்வார்கள்.உள்ளுணர்வுக்கு வலிமை உண்டு.




இது வேறு:
எளிமையாகவே இருந்தாள். கைகள் முழங்கை வரை மேல் சட்டை (ஜாக்கெட்) முதுகில் ஒரு சிறு இடம் கூட தெரியாமல் முழுதாக மறைந்திருந்தது ஆண்கள் சட்டை போல...அனேகமாக தமது உடல் முகம் தவிர வேறு ஏதும் தெரியாதபடி அவள் ஆடை அணிந்திருந்ததே அபூர்வமாக இப்படியும் இந்தக் காலத்தில் இருக்கிறார்களா என சிறப்புக் கவனம் அவர் மேல் கொள்ள வழி வகுத்திருந்தது.




 இது வேறு:
எல்லாமே உயர் நிலையில் உள்ள பெண்கள் கூட்டம். அவள் மட்டும் சிகையலங்காரத்தை தொழில் முறைக்கேற்ப எடுத்து வளைத்து இறுக குடுமியாக்கி தினம் வருவதும் அவளுக்கு ஒரு சிறப்புதான்... தனித்துவம் எங்கும் சிறக்கிறது....பொதுவாக இது போன்ற குடுமிகள் வயதானவர்கள் தான் போட்டுக் கொள்வார்கள். என்றாலும் இந்த தனித்துவம் இவளுக்கு மெருகூட்டி இவளது அழகை மேலும் கூட்டி இருந்தது.

பி.கு.: தேர்தல், வாக்குப் பதிவு, பாரதீய ஸ்டேட் வங்கியின் 570 கோடி, மறுத் தேர்தல் அரவக் குறிச்சி தேர்தல் 23க்கு தள்ளி வைப்பு,கடும் வெயில், மேட்டூர் நீர் அளவு 48 அடி எல்லாமே பிரச்சனையாகிவிட அவை எல்லாம் நீக்கி கொஞ்சம் பாதம் பதித்து இருக்கிறோம். மனோமயக்கத்திற்காக, வாழ்வின் இலயத்திற்காக சில நேரங்களில் சந்தனத்தை தொட்ட வாசம் அதை வைத்து விட்ட போதும் கைகளில் எஞ்சியிருப்பது போல, வாசனைத்திரவியங்கள், மகரந்தக்கேசரங்கள், சில பூக்கள், காய்கள்,கனிகளை வைத்துவிட்ட பிறகும் அதன் வாசம் கொஞ்ச நேரம் நம் கைகளில் ஒட்டி இருப்பது போல சற்று நேரம் நம்மை விட்டு நீங்காதிருப்பது போல இந்த மணத்தை (ஃபிராக்ரன்ஸ் Fragrance) உங்கள் மேலும் தெளித்து விட இந்த வடிகாலான எழுத்து)

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Friday, May 13, 2016

சில நேரங்களில் சில தவறுகள்: கவிஞர் தணிகை.

சில நேரங்களில் சில தவறுகள்: கவிஞர் தணிகை.




தி.மு.க இம்முறை ஆட்சி அமைக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன. என்.டி.டி.வி கூட அப்படித்தான் சொல்லி இருக்கிறது. அதை ஒரு ஊடக நண்பர் மாற்றி கூறியதை நானும் நம்பி நேற்றைய பதிவின் மூலம் கவலை தெரிவித்திருந்தேன் அதற்கு என் மனதார்ந்த மன்னிப்பும், வருத்தமும்.

உளவுத் துறையும் தி.மு.க தான் என்று சொல்லியதாக ஒரு காவல்துறையின் நண்பரின் அலுவலக ரீதியில் இல்லாத கருத்து தெரிவிப்பு உள்ளது. அதை மாற்ற  அ.இ.அ.தி.மு.க எவ்வளவோ தவறான வழிகளை எல்லாம் கையாள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அட்டையால் செய்யப்பட்ட வாக்குப் பதிவு எந்திரம் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் பேருடன், மேலும் பல்வகையிலும் பணப்பட்டுவடா என்றெல்லாம்.ஆனால் அவை எல்லாம் முடிவை எந்தவகையிலும் பாதிக்கப் போவதில்லை.

மேலும் ஒரு இடத்தில் விழுந்த சுமார் 2000 தபால் வாக்குகளில் 1940 வாக்குகள் தி.மு.க சார்பாகவே இருந்ததாகவும் இருக்கக் கூடும் என்றும்(பொதுவாகவே அரசு அலுவலர்கள் தி.மு.கவுக்கே வாக்களிப்பது அனைவரும் அறிந்ததே) மீதமுள்ள 60 வாக்குகள் மட்டுமே மற்ற கட்சிக்கு சென்றிருப்பதாகவும் அறிந்திருப்பதாக தாம் கேள்விப்பட்டதாக ஒரு நண்பர் தெரிவித்துள்ளார்.

ஒரு ஊடகவியலாளராக இருந்து கொண்டு யூகத்தை அல்லது பிறர் சொல்லியதை எல்லாம் நம்பி நாம் எழுதி விடக் கூடாது என்பதற்கான பாடத்தை நாம் கற்றுக் கொண்டோம்

மேலும் இப்போதெல்லாம் முன் போல் நேரம் கிடைக்காததால் இது போன்ற பதிவுகளையே நாம் வெளியிட வேண்டியுள்ளது உங்களிடம் இருக்கும் எமது தொடர்புகள் விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகவே.உடற் சிரமத்துக்கிடையேயும் எழுதுவதை தொடர்கிறேன்.

ஆனால் இது போன்ற தகவல்கள் அல்லது சிறு சிறு தவறுகள் எப்படி ஒரு பெரிய மிகப் பெரிய தவறுகளுக்கும் அழிவுக்கும், விபத்துகளுக்கும் அடியிட்டுக் கொடுக்கும் வழி கோலும் என்பதற்கான சான்றுகள் பல காலம் காட்டி இருப்பதை நாம் அனுபவ  அடிப்படையிலும், படிப்பினை வழியாகவும், படித்தது வழியாகவும் அறிந்துள்ளோம். எனவே இந்தப் பதிவு அதற்காகவே.

வரக்கூடிய முடிவு மக்களுக்கானதாக நல்ல முடிவாகவே இருக்கும் என நம்புவோமாக!




மேலும் அன்றைய முடிவுகள் கண்டு எந்தவித போக்குவரத்து இடைஞ்சல்களும், வன்முறைக்கும் இடம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தமிழகம் எப்போதும் போல அமைதிப்பூங்காவாகவே விளங்க வேண்டும் என்றும் இயற்கையை பிரார்த்திக்கிறோம்.

மறுபடியும் பூக்கும் வரை.
கவிஞர் தணிகை.

Thursday, May 12, 2016

ஏழைகளின் குறும்பில் இறையைக் காணோம் இயற்கையைக் காணோம்,இரையைக் கண்டோம்,இறையக் கண்டோம்: கவிஞர் தணிகை

ஏழைகளின் குறும்பில் இறையைக் காணோம் இயற்கையைக் காணோம்,இரையைக் கண்டோம்,இறையக் கண்டோம்: கவிஞர் தணிகை

தேர்தலில் வாக்குப் பதிவுக்கு ஒரு வாரம் டாஸ்மாக் விடுமுறை விட்டால்தான் குளறுபடி இல்லாமல் தேர்தல் நடத்த முடியும். 37 சதவீதம் மது அதிகம் தேர்தல் வாக்கு சேகரிப்புக் காலத்தில் விற்பனை கூடியதாக தேர்தல் ஆணையமே அறிக்கை.ஆக தேர்தலில் பணம் விளையாடி வருவதை குருட்டுப் பூனைகளுக்கும் தெரியும் தானே?

பொதுவாகவே சில காட்சிகள்: எந்த வித பெரிய மாவட்ட அளவிலான பேருந்து நிறுத்தங்களில் முக்கியமான பஸ் நிறுத்தங்களில் நிற்க முடியாத அளவு துர்நாற்றம்,குப்பைக் கூளங்கள் என்னதான் எப்படித்தான் தூய்மைப்பணி நடைபெற்றபொதும்.



எடுத்துக்காட்டாக சேலம் பேருந்து நிலையம், 5 ரோடு போன்றவைகளில் அதிகாலையிலேயே பேருந்துக்கு காத்து நிற்க முடியவில்லை.அவ்வளவு துர் நாற்றம். முடை நாற்றம்.

அழுக்குப் பிரியன்கள் சாலையிலேயே எச்சில் துப்பி அனைவர்க்கும் வியாதி பரப்புவார்களாகவும், அங்கேயே சிறு நீர் கழிப்பார்களாகவும் இலவச சிறு நீர் கழிக்க மறைவிட கழிப்பகத்துக்கு சென்றாலோ மயங்கி விழுந்து விடக் கூட நேரிடும். கொடுமை. மனிதா மனிதா இந்தக் கொடுமை என்று தீர்வது?

இதன் ஒரு ஒட்டு மொத்த சேர்க்கையாகவே தேர்தல் களமும் இருக்கிறது என்பது மறுப்பதிற்கில்லை. பணம் பட்டுவடாப் பற்றி சர்வ சாதாரணமாக செய்தி ஊடகங்களில் அனுபவச் செறிவுகள் பகிரப்படுகின்றன.

https://www.facebook.com/anbalaganfb/videos/10153832610808303/



தேர்தல் ஆணையம் எப்படித்தான் செயல்படுகிறது? ஏன் இந்த ஜனநாயகத் தோல்வி..இதன் எதிரொலி, எதிரொளி தேர்தலின் பின் தெரியலாம்..இன்னும் எப்படி செயல்பட வேண்டும்? இன்னும் எப்படி செயல்படுவது? போன்றவை விவாதிக்கப்பட வேண்டும்.. அமல்படுத்தப் பட வேண்டிய அவசியங்கள் இந்தியாவில் .



ஒரு பாட்டி சிறு காற்றாடி ஒன்றை வண்ணத் தாள் ஒட்டியதை இளங்காலையில் எடுத்துப் பத்திரப் படுத்தி வைக்கிறாள் பேரனுக்காக.

உங்கள் பொழுதை நீங்கள் எடுத்துப் பத்திரப் படுத்தி பாதுகாத்து வைத்துக் கொள்ள வில்லை எனில் இந்தக் குப்பையுள் அசுத்தக் கூடாரத்துள் அமிழ்ந்து மூச்சு முட்டி நீங்களும் ஒரு குப்பையாக நிறைந்து போய் விட வேண்டியதுதான்...

இன்னும் பொழுதே சரியாகப் புலரவில்லை.



பேருந்தில் வண்ண வண்ண ஆடைகளுடன் பின்னால் ஒவ்வொரு பெண்ணும் ஒருவித பின் புற அலங்காரச் சட்டை அணிந்து அனைவரும் பார்க்கட்டும் என நெருங்கி நெருங்கி நிற்க முயல்கிறார்கள்....

பொது வாழ்வும், பொது இடங்களில் பயணமும் யோகத்திலிருப்பார்க்கு அவசியமில்லை பொருத்தமில்லை என்றபோதும் இந்தக் காட்சிகள் வாழ்க்கைத் தேடல் தேடுவார் முன் காட்சிகளாக விரிகிறது...

இதை எல்லாம் கடந்துதான் இலட்சியம் நோக்கி பயணங்கள் நடத்த வேண்டி இருக்கிறது...ஏழையை கூழானாலும் குளித்துக்குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்ற நமது தமிம் முதுமாது இந்த உலகக் குப்பையை உருவாக்கும் ஏழையைக் காணவே இல்லை.

இவர்கள் இரைக்காக எதையும் செய்வார்கள், இவர்கள் எந்த செய்தியையும் இறைய விடுவார்கள்....நொண்டிக்கு நூறு குறும்பு என்பார் பழமொழியாய்...

இந்த நொண்டிச் சமுதாயமாயிருக்கும் இந்த சமுதாயத்தில் நூறு அல்ல எண்ணற்ற குறும்பு இருக்கிறது...எனவே இறையை, இயற்கையை காணமுடியவில்லை, இரையை, தீச்செய்திகள் இறைவதைத்தான் காணமுடிகிறது...

உங்கள் பொழுதை நீங்கள் எடுத்துப் பத்திரப் படுத்தி பாதுகாத்து வைத்துக் கொள்ள வில்லை எனில் இந்தக் குப்பையுள் அசுத்தக் கூடாரத்துள் அமிழ்ந்து மூச்சு முட்டி நீங்களும் ஒரு குப்பையாக நிறைந்து போய் விட வேண்டியதுதான்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Wednesday, May 11, 2016

உடல் என்னும் எந்திரம்: கவிஞர் தணிகை

16 மே முதல் 28 ஜூன் வரை கோடைக்கால உச்ச நீதி மன்றம்  விடுமுறை என்பதால் அம்மா வழக்கு தேர்தலில் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தப் போவதில்லை.

. உடல் என்னும் எந்திரம்: கவிஞர் தணிகை




தேர்தல் முழக்கங்கள் ஆங்காங்கே.. எஸ்.ஆர். பார்த்திபன் எம்.எல். வீடு வந்து வாக்கு சேகரித்து சென்றதாக வீட்டில் செய்தி.
கலைஞர் கருணாநிதி தமக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் தான் முதல்வர் என சொல்லிய சேதி நேற்று முதல் பிரபலம்.இதை எல்லாம் விட உடல் ஒத்துழைத்தல், ஒத்துழையாமை பற்றி சொல்ல விழைகிறேன்.

கல்வி பற்றி சொல்ல கவிஞர்கள்: கல்வி கரையில கற்பவர் நாள் சில, மெல்ல நினைக்கின் பிணி பல...என்பார். நீங்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் உடல் ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்து அதன் பின் தளர்ந்து மடிந்து போகத் தயாராகி விடுகிறது.

அதற்கு ஆயிரத்து எட்டு காரணங்கள் சொல்லலாம். உணவு காரணமென்பார் , பழக்க வழக்கங்கள் காரணமென்பார், எண்ணம் , சொல், செயல் காரணங்கள் என்பார். ஆனால் எந்த காரணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உயிருள்ளவை அனைத்துமே உடல் நீக்கியே ஆக வேண்டும்.

அது நானாக இருந்தாலும், நீங்களாக இருந்தாலும்...

இதில் கலைஞர் என்ன, ஸ்டாலின் என்ன, ஜெ.ஜெயலலிதா என்ன எல்லாம் இந்த ஒரு விதியில் அடக்கம்.



உடல் என்னும் எந்திரம் தேய்மானம் அடைந்து,துருப்பிடித்து வியாதியுற்று செயல் இழக்க நேரிடுகிறது. இதையே சித்தர்கள் சீக்கிரம் சீக்கிரம் ஏதாவது செய்து முடிப்பீர் எனச் சொல்வார்கள். இல்லையென்றால் இந்தப் பை , இந்தப் பாண்டம், இந்தத் தோண்டி எதற்கும் உதவாமல் போய்விடுமென்பார்.

உடல் என்னும் எந்திரத்துக்கு மறுபடியும் நல்ல சுமை அழுத்தம் கொடுத்து வருகிறேன். உண்மையான சேவையாளர்கள் கடைசியில் உடலையும் உயிரையும் கூட ஏதாவது ஒரு பயன்பாட்டுக்கு கொடுத்துச் செல்கிறார்கள்.

உடல் என்னும் கருவி, எந்திரம் நாம் சொன்னபடி 40க்கும் மேல் கேட்பதில்லை சிலர் 100ஐயும் மீறி பேறு பெறுகிறார்கள். ஆனால் செய்வது செய்தது பற்றியே பெருமை. எவ்வளவு இந்த உடல் இழுபடுகிறது என்பதில் அல்ல.

மறுபடியும் பூக்கும்வரை

கவிஞர் தணிகை

பி.கு: என்.டி.டி.வி,பிபிசி போன்ற புகழ் பெற்ற கட்சி சாரா செய்தி ஊடகங்கள் அ.இ.அ.தி.மு.கவே அதிக இடங்களில் வெற்றி பெறும் எனச் செய்தி வெளியிட்டுள்ளதாக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். உள்ள படியே இது வருத்தத்திற்குரியது. அவ்வாறு நேராது. நேரக் கூடாது என நம்புவோமாக.எமது தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் திரு செம்மலை அவர்கள் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் மக்கள் சந்திப்புக்கு வர இயலாதவர் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் மேட்டூர் பிளான்ட். எண் 2 ஆலைக்கு இதுவரை
2 முறை வந்து சென்றிருக்கிறார். பணப்பெட்டி சூட்கேஸ்கள் கை மாறி இருக்கலாம் என பார்த்த தொழிலாளர்கள் பேசிக் கொள்கின்றனர்.

Monday, May 9, 2016

சினிமாவோ கதையோ அல்ல வாழ்வின் வெற்றிமுகம்: கவிஞர் தணிகை

சினிமாவோ கதையோ அல்ல வாழ்வின் வெற்றிமுகம்: கவிஞர் தணிகை

தனி மனிதராக நின்று தனக்கு நீர் கொடுக்காத சமுதாயத்துக்கு தனி உழைப்பை ஈந்து நீருக்காக கிணற்றை வெட்டி அதில் கிடைத்த நீரை அனைவர்க்கும் பகிர்ந்தளித்த பரந்த மனதுக்காரர் பற்றி பகிர்ந்து கொள்ளத் தான் வேண்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
 நன்றி
 தினத் தந்தி.


உயர் சாதியினர் எதிர்ப்பு, தனி ஒருவனாக 40 நாட்களில் கிணறு தோண்டி அனைவருக்கும் தண்ணீர் வழங்கியவருக்கு பாராட்டு
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
225
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
திங்கள் , மே 09,2016, 9:34 AM IST
பதிவு செய்த நாள்:
திங்கள் , மே 09,2016, 9:34 AM IST


நாக்பூர், 

பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க உயர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தொழிலாளி ஒருவர் தனி ஒருவனாக நின்று கிணறு தோண்டி அதன் தண்ணீரை அனைத்து தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார்.

தண்ணீர் பிடிக்க மறுப்பு 

வாசிம் மாவட்டம் கோலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ் தஜ்னே. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அப்பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு சமீபத்தில் தண்ணீர் பிடிக்க சென்றார். இவர்கள் தலித் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், தண்ணீர் பிடிக்க உயர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஏமாற்றத்துடன் பாபுராவ் தஜ்னேயின் மனைவி வீடு திரும்பினார். நடந்ததை கணவரிடம் கூறி வருத்தப்பட்டார். இருந்தாலும், பாபுராவ் தஜ்னே சோர்ந்து விட வில்லை. 

தன்னுடைய நிலத்தில் கிணறு தோண்டி அதன் மூலம் தன்னை சார்ந்த தலித் மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும் என தீர்க்கமாக முடிவு செய்தார். அதன்படி, தன்னுடைய நிலத்தில் தனி ஒருவனாக நின்று கிணறு தோண்டும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.

முயற்சிக்கு பலன் 

ஆரம்பத்தில், இவரது செயல்பாட்டை மனைவி உள்பட அனைவரும் விமர்சனம் செய்தனர். நக்கலாக சிரித்தனர். எனினும், தன்னுடைய வியர்வை துளியை மூலதனமாக கொண்டு, செயலில் அவர் உறுதியுடன் இருந்தார். எண்ணி சரியாக 40–வது நாளில் பாபுராவ் தஜ்னேயின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. அவர் தோண்டியிருந்த அந்த கிணற்றில், எக்கச்சக்கமாக தண்ணீர் கிடைத்தது.

இதைப்பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தற்போது அந்த கிணற்று நீரை வைத்து அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அப்பகுதியை சேர்ந்த தலித் மக்களும், உயர் சாதியினரும் பயனடைந்து வருகின்றனர். 

ஆரம்பத்தில், அவரை எள்ளி நகையாடியவர்கள் கூட, இப்போது வாழ்த்துகளை சொல்லி உள்ளம் பூரிக்கின்றனர்.

எங்களுக்கு தண்ணீர் தர மறுத்த உரிமையாளர் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை. இருப்பினும் நாங்கள் ஏழைகள் மற்றும் தலித் என்பதினால் அவமதித்துவிட்டார். மார்ச் மாதம் அழுதுக் கொண்டே கிராமத்திற்கு வந்தோம். யாரிடமும் யாசிப்பதால் தண்ணீர் தேவையானது பூர்த்தியடையாது என்று புரிந்துக் கொண்டேன். நான் மாலிகான் சென்றேன், கிணறு தோண்டுவதற்கான பொருட்களை வாங்கி வந்தேன், தோண்டினேன். என்னுடைய கிணற்றில் தண்ணீர் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று பாபுராவ் தஜ்னே கூறிஉள்ளார்.

அப்பகுதியில் தண்ணீர் எங்கு இருக்கிறது என்று ஆய்வு செய்யாமல் கூட அவர் தோண்டிஉள்ளார். நான் கிணறு தோண்டுவதற்கு முன்னதாக கடவுளை மட்டுமே நம்பினேன், அவர் என்னுடைய வேண்டுதலுக்கு பலனாக தண்ணீர் கொடுத்து உள்ளார் என்றும் குறிப்பிட்டு உள்ளார். 

மாவட்ட நிர்வாகம் பாராட்டு 

இந்த தகவல் வாசிம் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தாசில்தார் கிராந்தி டோம்பி, கோலம்பேஷ்வர் கிராமத்துக்கு சென்று பாபுராவ் தஜ்னேயை சந்தித்தார். மேலும், அவரது இந்த செயலை மனதார பாராட்டியதுடன், ‘‘நீங்கள் உறுதியின் உருவமாகவும், வலிமையான மன வலிமை கொண்டவராகவும் இருக்கிறீர்கள்’’ என்று புகழாரம் சூட்டினார்.

பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க உயர் சாதியினர் மறுப்பு தெரிவித்ததால், தொழிலாளி ஒருவர் தன்னம்பிக்கையுடன், தனி ஆளாக நின்று கிணறு வெட்டி அதன் தண்ணீரை ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும் பகிர்ந்தளிப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தி இருக்கிறது.

கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
225
பிரதி
Share

Sunday, May 8, 2016

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் செயலின்மையும்: கவிஞர் தணிகை

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் செயலின்மையும்: கவிஞர் தணிகை



வரும் ஆனா வராது, நடக்கும் ஆனா நடக்காது, கிடைக்கும் ஆனா கிடைக்காது செயல் படும் ஆனா செயல்படாது இது போன்ற வடிவேலுவின் வாசகங்கள் நமது இந்திய , தமிழகத் தேர்தல் ஆணைய நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் .ஆனா பொருந்தாது...

எங்கு நோக்கினும் பேனர், பிளாஸ்டிக் பிளக்ஸ்களாக காட்சி அளிக்கும் முன் தேர்தலின் போதெல்லாம். ஆனால் இப்போது இன்றைய தேர்தல் களத்தில் ஒரு பிளக்ஸ் பேனர் கூட இல்லை. பாராட்டுகளும் நன்றியும் நமது இந்திய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு. கட்சிகளின் வாலை ஒட்ட வெட்டியுள்ளதால் .இந்த செயல்பாடு வரவேற்கத்தக்கதே.

வாக்களிக்கும் இடமான பள்ளி பூத் வாக்குச் சாவடிகளில் இருந்து 200 மீட்டர் கணக்கில் எந்த அரசியல் கட்சியினரும் குழுமக் கூடாது என்ற தடை விதித்தது, கட்சிக்கொடிகள் கம்பங்கள், கொடிகள், தலைவர்களின் படங்கள் சிலையாக, ஓவியமாகக் கூட இருக்கக் கூடாது என்றது,பூத் வாக்கு ஸ்லிப்களை நீங்கள் அளிக்க வேண்டாம் ஆணையமே அளிக்கும் என மாற்றியது என ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து ஜனநாயக நெறிமுறைக்கு ஒரு ஆளுமை காட்டி வருவதற்கெல்லாம் ஒரு பெரிய சல்யூட்.

ஒரு சுவர் விளம்பரம் கூட இல்லை. இதனால் உள்ளூர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு வருவாய் இல்லை குடிக்க காசு இல்லை என்றாலும் எவருக்கும் எவருக்குள்ளும் சண்டை சச்சரவு இல்லை. எல்லா வீட்டு, கடை, தெருமுனை, சாலைச் சுவர்களும் வழக்கப்படியே அமைதியாக இருக்கின்றன. வாழ்த்துகள் தமிழக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு.



பொதுமக்களின் சராசரி அன்றாட வாழ்க்கை பாதிக்கவில்லை. அவரவர் அவரவர் பணிக்கு சென்று கொண்டே இருக்கின்றனர். தேர்தல் ஆணையம் தனது பணியை கண்ணும் கருத்துமாக கண்ணியமாக செய்துகொண்டிருக்கிறது.

எனவே அதன் பணியாளர்கள் தலைமை ஆணையர் நஜீம் ஜைதி முதல் ராஜேஸ் லக்கானி, சைலேந்திர பாபு போன்ற காவல்துறை கூடுதல் தலைவர் முதல் அடிமட்ட பணியாளர் வரை அனைவர்க்கும் எமது வணக்கம்.

ஆனால் திறந்த வாகனத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் மக்களை மடை திறந்து கூட்டத் திடல் நோக்கி திரட்டிவருவார், கட்சிகள் மேல் ஏன் நடவடிக்கை இல்லை ? சரத் குமார் காரில் 9 இலட்சம், அ.இ.அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் சில கோடிகள், மின்வெட்டி விடியற்காலை வார்டு பிரமுகர்கள் காற்றுக்காக வெளி அமர்கையில் அவர்களுக்கு பணத்தாள்கள் அளிப்பு, ஆரத்தி எடுப்பு அன்பளிப்பு, இப்படி பண பரிமாறுதல்கள் குடும்பத்துக்கு 5000 என்றும் நபருக்கு 500, 1000,2000 என்றெல்லாம் விநியோகிக்கப்படுவதாக பகிரங்க செய்திகள் இதை எல்லாம் ஏன் எப்படி எதற்காக நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் பார்த்தபடி இருக்கிறது.?



அதிலும் முக்கியமாக ஆளும் கட்சி அ.இ.அ.தி.மு.கவின் கட்டுப்பாடற்ற இது போன்ற நடவடிக்கைகளை ஏன் கண்டும் காணாமல் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது? தேர்தல் ஆணையம்..

இந்த முக்கியமான நிகழ்வில் தேர்தலை பாதிக்கும் நிகழ்வில், திசை திருப்பும் நிகழ்வில் ஏன் வாளவிருக்கிறது? எப்படி தேர்தல் அறிக்கையில் எல்லாம் இலவசம் என்பதை வேடிக்கை பார்த்தபடி நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் வாளாவிருக்கிறது ஜனநாயக நெறிமுறைகளைக் காக்க வெறும் வாக்களித்தால் மட்டும் வாக்களிக்க சொன்னால் மட்டும் போதுமா? கணக்கு வழக்கு சமர்ப்பித்தால் மட்டும் போதுமா? இவர்களுக்கு போலிக்கணக்கு சமர்ப்பிக்க முடியாதா?



வேட்பாளர்களை திரும்ப அழைக்கும் உரிமை, வாக்களிப்பின் படி விகிதாசார முறைகள் வர முக்கிய ஜனநாயக கடமை யாற்ற வேண்டமா? ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகளை அனுமதி மறுத்து தேர்தலில் நிற்க தடை விதித்து வீட்டுக்கு அல்லது ஜெயிலுக்கு அனுப்ப வேண்டாமா? இதெல்லாம் பொறுப்புள்ள ஆணையம் செய்யக்கூடாதா?

டி.என். சேஷன் என்னும் நபர்தான் முதன் முதலில் தேர்தல் ஆணையம் என்ற அரசு எந்திரம் கூட எவ்வளவு சக்தி மிக்கது இந்திய ஜனநாயகத்தில் என செயல் நடவடிக்கை ஆரம்பித்தது...1990களில் இருந்து இதன் சக்தி வெளிப்பட்டது

நவீன் சாவ்லா,டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.கோபால சாமி,வி.எஸ்.சம்பத்,இன்னும் பலர் இதன் தரத்தை உயர்த்தினர். அதில் தமிழகத்தை சார்ந்த சிலரும் பெரும்பங்கு வகித்தனர். எம்.எஸ் கில்,எச்.ஒய்.குரேசி, பிர்மா,வி.எஸ்.ரமாதேவி, சாமிநாதன், கல்யாண் சுந்தரம் போன்றவர் பட்டியல் விரிகிறது.




நாம் இந்த பதிவுடன் சொல்ல விரும்புவது, குடியரசுத் தலைவர், பிரதமர், பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம், நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் யாவரும் ஜனநாயக மரபாகிய இந்த தேர்தல் மக்கள் விழாவை இன்னும் பொருள் பொதிந்த மக்களுக்கு நாட்டுக்கு உகந்த சக்தியாக இதை நோட்டா, 49ஓ  போன்றவற்றுடன் அடுத்த கட்டத்துக்கு பயன்படா வாக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்றி பல படிகள் முன் உயர்த்திச் செல்ல வேண்டும் என்பதே. சார்புடையதாய் இருக்கக் கூடாது என்பதே.

ஏன் பஞ்சாயத்து , சட்டசபை, பாராளுமன்ற தேர்தல் அனைத்தையும் ஒரே காலத்தில் நடத்தி முடிப்பது இது கூட தேர்தல் ஆணையத்தால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முன் வந்து நிற்கும் எதிர்காலப் பணியாகும். ஆனால் பணியாகாது..



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.