Sunday, April 15, 2018

சில மழைத் துளிகள்: கவிஞர் தணிகை

சில மழைத் துளிகள்: கவிஞர் தணிகை


Related image


எங்கு பார்த்தாலும் ஏமாற்று, வஞ்சகம், பொய், வன்முறை, கடத்தல், அரசியல் புலைத்தனம், சிறுமி வன்புணர்ச்சி, நீர்ப் பங்கீட்டுக்கு எதிர் வினைகள்,மத்திய மாநில அரசுகளின் கையாலாகாத் தனம்... இப்படி சொல்லொணாத் துயரங்களும், துன்பங்களும் தலைவிரித்தாடுகையில் கொடும் கோடையின் தாக்கமும் தாக்குப் பிடிக்க முடியாமல் வந்து சேர்ந்து விட்ட நிலையில்...

அண்மைக் காலத்தில் சில செய்திகள் நல்லனவற்றையும் காண நேர்ந்தது அங்கொன்றும் இங்கொன்றுமாக: அவற்றுள் சில:

Image may contain: Vaa Manikandan, eyeglasses

வா . மணிகண்டன் என்னும் முக நூல் நண்பர் தம் வழியே சுமார் அரை கோடி வந்ததாகவும் அதை அப்படியே ஏழை எளிய தேவைப்படுவார்க்கு திருப்பி விட்டதாகவும் அதன் கணக்குகளை அப்படியே கொடுக்க எந்தவித கடினமும் இல்லை அப்படியே பாஸ்புக்கின் கணக்கை காட்டி விட்டேன்.. என மிக எளிமையாக சொல்லி இருக்கிறார். அதுதான் சரியான கணக்கு.

அப்படிப்பட்ட நபர்கள் தாம் நமது சமூகத்தின் தற்போதைய தேவைகள். எனகும் கூட அது போன்று செய்யவேண்டும் என்ற உந்துதல் இருந்தது உண்மை ஆனால் எனது வட்டம் வேறு வழி சென்று கொண்டிருக்கிறது...

அட நம்ம 21 காமன்வெல்த் கோல்ட் கோஸ்ட்  2018ன் விளையாட்டுகளில் இந்தியா 26 தங்கப்பதக்கங்களுடன்  66 மொத்தப் பதக்கம் பெற்று ஆஸ்திரேலியா , இங்கிலாந்து போன்ற வல்லரசுகளுக்கும் அடுத்து  3 ம் இடத்துக்கு வந்துள்ளது 71 நாடுகள் பங்கேற்றதில் கனடா போன்ற நாடுகள்  இந்தியாவுக்குப் பின் வர....
Image may contain: 2 people
வழக்கமாக ரத்னவேல் அய்யா திருவில்லிப்புத்தூர் தமது சேவையை வயது ஒரு பொருட்டின்றி ஒருங்கிணைப்பு செய்து வருவதும்...


சினிமா புதிய தமிழ் சினிமாக்கள் வராமல் நிறுத்தப்பட்டதும், ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கு எதிரான ஒரு இயக்கம் ஏற்பட்டதும்... அது தமிழகத்துள் விளையாட்டு அரங்கத்துள் நடக்கக் கூடாது என்றதும்...

பாடகர் சீனிவாசன், பாலாஜி, ஸ்ரீக்காந்த் போன்றோருக்கு அது பிடிக்காமல் போனால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்? ஐ.பி.எல் போன்ற வியாபார நோக்கத்துடன் நடத்தப்படும் விளையாட்டுகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என லலித் மோடிக் காலத்திலேயே நமது பதிவுகள் வந்திருப்பதை என்னை நினைவில் வைத்திருப்பார் மறந்திருக்க முடியாது..

நாம்  20 ஓவர் மேட்சை விட 10 ஓவர் மேட்ச் ஆடுங்கள் என எழுதி இருந்ததையும் நினைவு படுத்திப் பார்ப்பார்க்கு தெரியும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: