Saturday, April 14, 2018

சேலத்து விளம்பி: கவிஞர் தணிகை

சேலத்து விளம்பி: கவிஞர் தணிகை

Related image


தமிழ் ஆண்டுகளில் இது முப்பத்தி இரண்டாம் ஆண்டாக வருகிறதாம் இந்த விளம்பி ஆண்டு. விளம்பல் என்றால் சொல்லியதைச் சொல்லல், அல்லது சொல்லுதல் பிறர் எழுதியதன் மேல் மேலும் மேலும் திரும்பத் திரும்ப எழுதல் என்ற பொருள்படும்.

நேற்று சேலத்தை சேலம் சந்திப்பு முதல் கன்னங்குறிச்சி வரை சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சேலம் வெகுவாக வளர்ந்திருக்கிறது. எல்லா இடங்களிலும் பெரும் கூட்டம்.

கட்டடங்கள் மாறி இருக்கின்றன. ஆனால் கன்னங்குறிச்சிக்கு சுமார் 10 அல்லது 10.30 மணிவரைதாம் பேருந்து தொடர்பில் இருக்கிறதாம். அதே கோவிலைச் சுற்றித்தான் பேருந்து வந்து நிற்கிறது. கோவிலைச் சுற்றி பயணிகள் காத்திருப்போர் அமர என ஸ்டீல் நாற்காலிகள் இருக்கைகளாக போடப்பட்டிருக்கிறது நல்ல வசதி...

மதுவிலக்கு எம்.எல்.ஏ  வேட்பாளராக எங்களால் நிறுத்தப்பட்டு சுமார் எண்ணூறு சொச்சம் வாக்குகளைப் பெற்று கட்டிய இருப்புத் தொகையை இழந்து போனாலும் எமக்கு அதுவும் ஒரு வெற்றிதான்...சசிபெருமாள் உயிரை விட்டு புகழ் பெறுமுன்பே இந்த  பரீட்சையை நாங்கள் நிகழ்த்தி இருந்தோம்...அந்த எம்.எல்.ஏ வேட்பாளரான சின்ன பையன் அவர் 70 வயதுக்கும் மேல் வாழ்ந்த பெரிய மனிதர்...உண்மையான காமராஜர் வாரிசுதாம் எங்களைப் பொறுத்தவரை கன்னங்குறிச்சி என்றால் அது சின்னபையன் தான். சின்னபையன் இல்லா கன்னங்குறிச்சிக்கு நான் சென்றது சில வாரங்களுக்கு முன் இடுப்பு சேர்க்கை எலும்பை செயற்கையாக வைத்து அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் எனது மூத்த சகோதரி ஒருவரைப் பார்க்கும் பொருட்டுதாம்.

சின்ன பையன் கதர் வேட்டி, கதர் சட்டை காலில் செருப்பில்லாமல் ஓடி ஆடித்திரிந்த ஒர் குடும்பமில்லா கட்டை பிரம்மசாரி, கைப்பந்து பயிற்சியாளர் வேறு அவருக்காக அவர் கோரிக்கைக்காக அவர் வேண்டுதலுக்காக பல முறை பல்வேறு சம்பவங்களில் அவர் ஊர் சென்று நான் உரையாற்றி இருக்கிறேன். அவருக்கு எனது பேச்சு என்றால் அவ்வளவு பிடிக்கும்.

எனது சகோதரி ஓய்வெடுக்க என்று இருந்த வீட்டில் அவரை கவனித்து பாதுகாத்து வரும் ஒரு மங்கை அவர் தமது மகளுக்காக ஒரு சிறு நீரகத்தை பரிசளித்தவர், மேலும் மகளின் சரி இல்லாத குடும்ப நிலைக்காக மாதா மாதம் தனது கணவரின் மறைவுக்காக கிடைத்து வரும் ஓய்வூதியத் தொகையிலிருந்து சுமார் பத்தாயிரம் மாதம் வழங்கி வாழ வைத்து வருபவர்... என அவரைப்பற்றி நிறைய தகவல்கள்.

அஸ்தம்பட்டியில் கொஞ்சம் பழங்கள் வாங்கலாம் என கடை தேடி ஒரு சிறிய கடையைப் பிடித்து வாங்கிக் கொண்டேன் அங்கே விலை அதிகமாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன்.... சாத்துகுடி 3, ஆரஞ்சு 3, ஆப்பிள் 3 எல்லாம் சேர்ந்தே ரூஉ: 180...
Image result for selam and tamil new year
கொண்டு சென்றதை சகோதரிக்கு கொடுத்து விட்டு, தேறுதல் சொல்லிவிட்டு திரும்பி கன்னங்குறிச்சி கோவிலிலிருந்தே பேருந்து ஏறிக் கொண்டேன். நகர பேருந்து நிலையம் நோக்கி.

அங்கொரு கடையில் சித்திரக் கனிக்கென சிறிய அளவில் அதாவது மகனும் வெளியூரில், இருப்பதால் வழக்கமாக செய்வதை காரணமாகக் கொண்டு சிறிய அளவில் செய்யலாம் என விலை கேட்டால் ஆப்பிள் கிலோ விலை ரூஉ.180 ஆம் கிலோ. எடையும் தெளிவாக நமக்கு வாங்குவார்க்கு தெரியாதபடியே இருக்கிறது. அரை கிலோ போதும் என்றால் 3 பழம் கொடுத்து அது முக்கால் கிலோ என 130 ரூ எடுத்துக் கொண்டார். சாத்துகுடி, ஆரஞ்சு ஆகிய பழங்களும் சிறிய அளவில் இருந்த போதிலும் அதுவும் 180, 170 எனச் சொன்னதால் வாங்க மறுத்து, பிளாஸ்டிக் பை வேண்டாம் எனச் சொல்லி அந்த 3 பழங்களை எனது அலுவலகப் பையிலேயே வைத்துக் கொண்டு திரும்பினேன். அவருக்கு இல்லையே அஸ்தம்பட்டியில் ஒரு கடைக்காரர் ஆரஞ்சு கிலோ ரூஉ `100 என்றும், சாத்துகுடி ரூஉ. 80 என்றும் தான் சொன்னார்கள்...இப்படி விற்றால் வாங்குவார் , வேலை செய்வார் அவ்வளவுதான் எனச் சொல்லி விட்டு வர முற்படுகையில் மற்றொருவர் வந்து பழங்கள் விலை கேட்க என் முன்னாலே அந்தப் பக்கம் விலை ரூஉ.180, இந்தப்பக்கம் ரூஉ. 170 என்கிறார், ஒருவேளை ஆளைப்பார்த்து அவர் உடை பார்த்து விலை சொல்பவராய் இருக்கிறாரோ..இவர் போன்றவர்க்கெல்லாம் ஒரு அழுக்கு வேட்டி கட்டித்தான் கடைக்கே போய் இருக்க வேண்டும் போலிருக்கிறதே...என அந்த மனிதன் எவ்வளவு போலியாக நம்மை ஏமாற்றுகிறான் எனத் தெரிந்தபடியே நொந்தபடியே வந்தேன்.

சற்று நகரப் பேருந்து உள் வந்ததும் ஒரு அம்மாவும் , மகனும் சிறிய அளவில் ஒரு தட்டத்தில் பெரும் சாத்துகுடிபழங்களையும் ஆரஞ்சு பழங்களையும் கிலோ ரூஉ: 80, மற்றும் 100 என்று அஸ்தம்பட்டிக் கடைக்காரர் சொன்ன அதே விலையை சொன்னார்கள்...அங்கும் பிளாஸ்டிக் பை வேண்டாம் எனச் சொல்லி...அது எரித்துவிடலாம் எனச் சொன்ன அவர்களுக்கு அது எரித்தாலும் சுவாசிக்க கேடுதாம் என்று சொல்லி விட்டு.. வாங்கிக் கொண்டேன்.

அந்த அஸ்தம்பட்டி கடைக்காரர் எவ்வளவு நியாயமாக விற்பனை செய்தார் ஏன் இந்த நகரப் பேருந்து நிலையம் வெளியே இந்த கடைக்காரர் இவ்வளவு அழிய விலை சொல்கிறார் என எண்ணப் பொருமல்...வீட்டில் வந்து பார்த்தால்...அந்த 3 ஆப்பிள் பழங்களில் ஒன்று அழுகிய பழம். மாற்றி கொடுத்திருக்கிறார்...ஆக அந்த நன்றாக இருந்த இருக்கும் என நினைத்து வரும் 2 பழங்களுக்கு ரூ. 130 ரூ  நல்ல வியாபாரம். குலம் விளங்குமா?

இதற்காகத்தான் நான் எப்போதும் பழங்கள் எல்லாம் வாங்க முற்படுவதேஇல்லை. என்றாலும் சில நேரங்களில் இப்படித்தான் மறுபடியும் ,மறுபடியும் நேர்ந்து விடுகின்றன....

சரவணா பேக்கரீஸ் வந்து ஒரு  டப்பாவில் அடைத்து 12 ஆம் தேதியிட்ட கீ பிஸ்கட் (வெண்ணெய் பிஸ்கட் வாயில் வைத்தாலே கரையுமே அதுதான்) அதுவும்  இரண்டு  மில்க் கேக் வாங்கி அதற்கு மோடி சர்க்காரால் போடப்பட்ட ஜி.எஸ்.டி வரியை 14 ரூபாயும் சேர்த்து கட்டி விட்டு...

மோடியும் அந்த பாழாய்ப்போன திருட்டு எண்ண வியாபாரியாய் இருந்த  அந்த நபரையும் சபித்துக்கொண்டே எனது விளம்பி ஆண்டு அல்ல அல்ல சித்திரைப் பிறப்பை சித்திரக்கனியை இந்த ஆண்டும் நகர்த்தி விட்டேன்...

ஏழைக்கெல்லாம் இனி நியாயமாக சம்பாதித்து வாழ்க்கையை நகர்த்துவார்க்கு எல்லாம் எந்த திருவிழாவும் இல்லை...ஆமாம் தை தமிழ் ஆண்டு பிறப்பா...சித்திரையா ஜெவா, மு.கவா...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment