Monday, July 17, 2017

கங்கையும் காவிரியும் பாவிகளால் பொய்த்துப் போனது: கவிஞர் தணிகை.

கங்கையும் காவிரியும் பாவிகளால் பொய்த்துப் போனது: கவிஞர் தணிகை.
Related image


தங்கள் பாவங்கள் எல்லாம் கங்கையிலும் காவிரியிலும் காசியிலும் பவானி கூடுதுறையிலும் மூழ்கி எழுந்தால் காணாமல் போய்விடும் என்று அனைவரும் சென்று காலங்காலமாக தலை மூழ்கி வந்ததால் கங்கையும் காவிரியும் நீரின்றி காணாமலே போய்விட்டன...அதுவும் எவ்வளவு பாவத்தைத்தான் தாங்க முடியும் பாவம்?

அனேகமாக இந்த ஆண்டு ஆடி 18க்கு எனது 55 ஆண்டு கால வாழ்க்கையில் முதன் முறையாக காவிரி ஆற்றுக்கு அணையோரத்துக்கு போக மாட்டேன் என எண்ணுகிறேன்.காரணம்..இன்று ஆடி ஒன்று நீர் அளவைப் பார்த்தால் வெறும் 24 அடி. 128 அடி அணைக்கு. எங்கு பார்த்தாலும் நிலப் பரப்பு, நீர்பரப்பே இல்லை. எனவே அந்த பொட்டிழந்த நெற்றியை, நீரிழந்த பூமியைப் பார்க்க எனக்கு வேதனைப் பற்றிக் கொள்ளும் எனவே இந்த முறை ஆடி 18க்கு நான் முதன் முறையாக செல்லப் போவதில்லை என நினைக்கிறேன்.

ஜக்கி சொல்கிறார், கர்நாடகா 50 சதம் விவசாயத்தை இழந்திருக்கிறது, தமிழகம் 65 சதம் இழந்திருக்கிறது என தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தாம் பிறந்த பூமிக்கு சமரசப் போக்கை கடைப் பிடித்து இது நாட்டுக்கே வந்த கேடு இதை சரி செய்ய 16 மாநிலங்களில் பேரணி செய்ய இருப்பதாக...

மரங்கள் நடுவது, தலையாயப் பணியாக செய்து 10 ஆண்டுகள்  கழித்து நிலையை சரி செய்து விடலாம் என்கிறார்

மேலும் இந்த ஏ.சி காமராஜ் இருக்கும் வரை தேசிய நீர்வழிச்சாலைத் திட்டம் இருக்கும் என நினைக்கிறேன் அதன் பிறகு அது நமது அரசியல் வாதிகளால் மறக்கடிக்கப்படும்.

Image result for lot of sin not able to wipe out by gangai and cauvery
மேலும் அஸ்ஸாமில் வெள்ளம், தமிழகத்தில் வறட்சி,...மறுபடியும் நல்லகண்ணு டெல்லியில் போராட்டம், மோடி குடியரசுத் தேர்தல் எல்லாம் மறைமுகமாகவே...

Related image
கொஞ்சமான பாவமா அங்கு அந்த நதிகளிலும் நதிக்கரைகளிலும் கரைக்கப்பட்டது? எனவே வற்றி விட்டதில் கவலைப் பட காரணமில்லை, பொருளுமில்லை...
Related image



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: