Monday, May 15, 2017

எடப்பாடி அரசு தற்போது செய்ய வேண்டிய முக்கியமான 3: கவிஞர் தணிகை

எடப்பாடி அரசு தற்போது செய்ய வேண்டிய முக்கியமான 3: கவிஞர் தணிகை


Image result for take immediate action

எடப்பாடி அரசு ஜெ அரசாகவே இருக்கட்டும், தமிழக அரசாகவே இல்லாதிருக்கட்டும், வீணாகப் பிடிவாதம் பிடிக்காமல் நாம் சொல்லும் இந்த 3 காரியங்களை இப்போதைக்கு செய்தாலும் போதும், இந்தக் கோடை வெம்மையிலும் பொதுமக்களிடம் நல்ல பேர் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் செய்யுமா, கண் காது உணர்வு, இருதயம் உள்ள அரசுதானா? அல்லது இதுவும் இவர்கள் குற்றவாளிகள் எல்லாமே என்னும் அவப் பேருடன் கறையுடன் மட்டுமே காலம் செலுத்தத் தான் போகிறதா?

1. 700 + 500 கோடி போக்குவரத்துத் தொழிலாளருக்கு நிலுவைத் தொகையைத் தருகிறேன் என வாய்மொழியால் சொன்னால் அது என்ன அரசின் நடவடிக்கையா? இதற்கு எதற்கு ஒரு மந்திரி எந்திரி எல்லாம், அரசு ஒன்றைச் செய்யவேண்டுமானால் எப்போதுமே அது அதன் எழுத்தாணையாகவே இருக்க வேண்டும் அதில் யாருடைய ஒப்பம் இடம்பெற வேண்டுமோ அது வேண்டும், தமிழக முதல்வர் அதற்கு ஒப்புதல் தந்தபின்னே அது பேசப்பட்டிருக்கிறது என்று சொல்லுகிறீர் அப்படியே அது அமைச்சரவை ஒப்புதல் வேண்டுமானால் கூட பெறப்பட்டு உடனே ஒரு எழுத்துபூர்வமாக தர முடியாதா?

உங்க அரசே தடுமற்றத்தில் இருக்கும்போது எவர் நம்புவார் உங்கள் வாய் மொழிப்பேச்சை எல்லாம்? மேலும் விஜய்பாஸ்கர் மேல் ஏகப்பட்ட தில்லு முல்லு புகார்கள் இருக்கும்போது அவரை அவர் பேச்சை எல்லாம் ஒரு பேச்சாக தொழிற்சங்கங்கள் நம்ப முடியுமா?

ஸ்டாலின் அரசுக்கு வர வேண்டிய ஆவலில் இருக்கும் தி.மு.கவின் தொ.மு.ச முக்கியமாக இதை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

எத்தனை தொழிற்சங்கங்கள் எல்லாம் கட்சி பேர் சொல்லி மக்களின் நலத்தில் துளியும் அக்கறையின்றி தம்மை அவரவர் ஸ்திரப்படுத்திக் கொள்ளவே போராட்டம், ஆட்சி, அதிகாரம் என மக்களுக்கு நன்மை செய்வதற்கு மாறாக ஊறு செய்யும் அமைப்பாகவே இருப்பதை நாம் கண் கூடாகவே காணமுடிகிறது. வீட்டை விட்டு வெளியில போனா வீடு வந்து சரியான நேரத்துக்கு சேரணும் சாமி, அது கூட உத்தரவாதம் இல்லைன்னா என்ன அரசு? என்ன அரசோ? என்ன ஆட்சியோ? என்ன புடலங்காவோ.? அப்படி புடலங்கா, கத்திரிக்கா, வெங்காயம் என்றெல்லாம் இனி சொல்லவும் முடியாது அதன் விலையோ உயர உயர மேலும் உயர உச்சியில்...இவர்கள் கம்பத்துக் கொடியை உச்சியில் பறக்க விடுகிறார்களோ இல்லையோ விலைவாசியை உயரத்துக்கு ஏற்றி விட்டிருக்கிறார்கள் அப்புறம் என்ன இவர்கள் ஆட்சி, ஆளுமை, கட்சி, அதிகாரம் எல்லாம்...இவனுங்க மக்கள் பணத்தில் காரில் டிரைவர் வைத்துக் கொண்டு மக்கள் பணத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு மினரல் வாட்டர் எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள், அங்கங்கே அவ்வப்போது தடையின்றி அதிகாரத் தோரணையுடன் பதவிப் பெருமையுடன் கிடைக்கும், இங்கே நடு ரோட்டில் வீடுவந்தும் சேர முடியாமல் கையிலும் காசில்லாமலும் இருக்கும் திருவாளர் பொதுஜனத்தை எந்த ஆட்சி என்றுதான் எண்ணிப் பார்க்கப் போகிறது? சங்கங்களும்தான், அமைப்புகளும்தான்...

பா.ஜ.க எப்படியாவது தமிழக அரசியலில் காட்சியில் முன்னிலைப் படுத்தப் படவேண்டும் ஆடும் நாடகம் எல்லாம் பொதுமக்களுக்கு, மதுபானக் குடியர்களுக்கு நுனிப்புல் மேய்வாருக்கு, நாட்டின் அரசின் பால் அக்கறை இல்லா நபர்களுக்கு வேண்டுமானல் தெரியாமல் இருக்கலாம் ஆனால் அதற்காக அனைவருக்குமே அது தெரியாமல் போகுமா? அனைவருமே அதை எல்லாம் ஆதரிக்க முடியுமா?

2. மக்கள் ஆதரவு இல்லாதது மட்டுமல்ல, பெரு எதிர்ப்பே இருக்கும்போது எதுக்கய்யா இன்னும் அரசு மதுபானக் கடை? இப்போது எடுத்து விட்டால் எடப்பாடி மக்களின் குரலுக்கு செவி சாய்த்து அரசாள்கிறார் என்ற நல்ல எண்ணம் ஏற்படும், இந்த அரசின் பால் மக்களுக்கு தாய்மார்களுக்கு ஒரு மென்முகம் கிடைக்கும்.

3. நாட்டில் நிலவி வரும் குடி நீர், நீர்ப் பஞ்சத்தை எப்பாடு பட்டாவது தீர்த்து வைக்க வேண்டும்.

இந்த 3 நடவடிக்கைகளை வெற்றிகரமாக செய்து விட்டால் அதுவும் இந்த உரிய நேரத்தில் செய்து விட்டால் அது நல்ல அரசாக அடிகள் எடுத்து வைத்தாக இருக்கும். எதற்கிந்த வெற்றுப் பிடிவாதம் ஜெ போல, அவர் அரசு போல அவர் வாழ்வு அவர் முடிந்த கதை ஒரு படிப்பினையாக இருக்க வேண்டாமா அவரை முன் மாதிரியாக கொண்டால் மக்கள் எல்லாம் இவர்களை எல்லாம் மூலையில் உட்கார வைத்து விட வேண்டும்.

பின் கட்டு வழியாக நுழைய முயலும் பி.ஜே.பிக்கு மக்கள் பாடம் புகட்டுவதும் இது போன்ற ஜெவின் குற்ற பரம்பரை எச்சங்களையும் அப்புறப்படுத்த மக்கள் முயல்வார்களா? அப்படி எல்லாம் முயன்றால் ஒரு மக்களாட்சி வர வழி கிடைக்கும்.

Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

2 comments: