Monday, November 21, 2016

2000 ரூபாய் நோட்டில் பிரதமர் மோடி பேசுகிறார் என்பதே பேச்சு: கவிஞர் தணிகை

2000 ரூபாய் நோட்டில் பிரதமர் மோடி பேசுகிறார் என்பதே பேச்சு: கவிஞர் தணிகை
Image result for modi speaks in 2000 rupee note in the place of mangalyaan satellite


பூனை வெளியே வந்து விட்டது. எலி அம்மணத்தோடு ஓடியது ஏன் என்பதும் தெரிந்து விட்டது. 2000 ரூபாய் நோட்டை சில்லறை கிடைக்கவில்லையே என்பதற்காக மட்டுமே வாங்காதீர் என்பதை விட மோடி பேசுகிறார் என்ற காரணத்தை காட்டியே புறக்கணிக்கலாம் என்கின்றனர் எதிர் அணியினர்.மேலும் இது சரியா என்றால் 20000 கோடி சொத்துள்ள ராகுல் காந்தியே கியூவில் நிற்கிறார் அதனால் இதில் எல்லாம் என்ன என்கிறார் மற்றொருவர்.

இன்று டாக் ஆப் த டவுன் என்னவென்றால் அந்த 2000 ரூபாய் நோட்டை திருப்பினால் மங்கள்யான் செயற்கைக் கோள் தெரிகிறது. அதை குறிப்பிட்ட ஆப் பயன்படுத்தி செல்பேசியில் பார்த்தால் அதில் மோடி பேசுவது நேரடியாக ஒளிபரப்பாகிறது.

புதிய 2000 ரூபாய் நோட்டில் அந்த சிறப்பு அம்சம் இந்த சிறப்பு அம்சம் என்றெல்லாம் வரை கோடிட்டு 15 வகையில் சொன்னவர்கள் இதை ஏன் சொல்லவில்லை இந்த ஊடகத்தார் என்பதுதான் அறிய முடியவில்லை.

ஒபாமா வரும்போது பல கோடி செலவில் கோட் தைத்து அதில் மோடி மோடி என போட்டுக் கொண்டவர் பின்னால் எதிர்ப்பு வலுத்ததும் அதை ஏலம் விட்டு நல்ல காரியத்துக்காக சேவை செய்ய பயன்படுத்த அந்த கோடிகளை மோடி தந்தார் என்பது முன்னால் செய்தி.

இந்நாளில், காந்தி, மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், அசோக சக்கரம், சூரியன் இப்படி எல்லாம் நாம் பணத் தாள்களில் பார்த்தோம் இந்தியாவில். ஆனால் இது புதிது. மிகவும் புதிது. செல்பேசியின் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஆப் பயன்படுத்தி ஸ்கேன் செய்வது போல, அல்லது போட்டோ எடுப்பது போல அல்லது வீடியோ எடுப்பது போல 2000 ரூபாய் நோட்டின் பின் பக்கம் திருப்பிப் பார்த்தால் மங்கள்யான் செயற்கைக் கோளில் இருந்து மோடி பேசுவது புலப்படுகிறது.

அறிவியல் பயன்பட்டிருக்கிறது. சுமிதா என ஐயப்பனுக்கு ஸ்மிர்தா பேர் கொஞ்சம் மாற்றி ஸ்பெஷல் ரயில் ஐயப்பமலைக்கு விட்டிருப்பது போல,இதில் எந்த அனுமதியும், எந்த அங்கீகாரமும், இல்லாமல் பிரதமர் என்ற ஒரே கோதாவில் தமது உருவத்தை வெளிப்படுத்தி பேசுவதை வைத்துள்ளார். இதற்கு முன் எந்த பிரதமரும் இந்த விதமான பணத்தாளில் தமது உருவத்தை அச்சடிக்க வில்லை இரகசியமாக உள்ளீடு செய்யவில்லை.. அவர்களுக்கு அந்த வாய்ப்பில்லை.
Image result for modi speaks in 2000 rupee note in the place of mangalyaan satellite


சத்தமில்லாமல் ஒரு தன்னைத் தானே வியந்து கொண்டு புகழ ஒரு சாதனை என நினைத்து இப்படி செய்து கொண்டார் போலும். இந்த பழைய 500, 1000 நோட்டு வேண்டாம் என்பவர் மறுபடியும் 500, 1000 நோட்டுகளை வெளியிடும் முன் இந்த 2000 நோட்டை ஏன் இவ்வளவு அவசரமாக வெளியிடுகிறார் என்றால் எலி அம்மணத்தோடு ஆற்றோடு போகிற ரகசியம் இன்றுதான் வெளியாகி இருக்கிறது.

இந்த நோட்டை வங்கிகள் தருகிறதே தவிர வாங்குவதில்லை. எவரும் சில்லறை தர அஞ்சுகிறார்கள். மேலும் இன்று ஒரு 13 வயதான கேரளத்து சிறுமி ஸ்கேன் செய்து கலர் பிரிண்ட் எடுத்து கடையில் மாற்றி அதை பக்கத்து கடைக்காரர் சில்லறை தரும் முன் கண்டறிந்துள்ளார். இது போல எத்தனையோ பேர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த கள்ளப் பணமாக பயன்படுத்த முனைந்துள்ளனர்.

பொருளாதார சீர் திருத்தம் செய்ய புறப்பட்டிருப்பதாக சொல்லும் மோடி அரசு தக்க கால அவகாசம் எடுத்துக் கொன்டு பணக்கற்றைகளை நல்ல முறையில் எந்தவித சிறு கள்ளத்தனத்துக்கும் இடம் கொடாத வகையில் செய்து கொண்டு வந்திருந்தாலும், 100 ரூபாய் நோட்டோடு நிறுத்திக் கொண்டிருந்தாலும் , நன்மையே.மேலும் இந்த 2000 நோட்டை கொண்டு வராமலிருந்திருக்க வேண்டும். இப்படி எல்லாம் இல்லாமல் மக்களை பாடாய்படுத்தி தடம் மாறி மறுபடியும் பண எவரெஸ்ட்களின் சாதகமாக நாட்டை கொண்டு செல்வதன் மூலமாக என்ன செய்ய விருக்கிறது என்பதை சில மாதங்களுக்கும் பின் அனைவரும் காணத்தான் போகிறோம். அவர்கள் சொல்கிறபடியே...

பேசாமல் இந்த நோட்டை திரும்பப் பெற்றால் அது நாட்டுக்கு நல்லது. இல்லையேல் இனி வரும் பிரதமர்கள் இதே நடைமுறையை எதிர்காலத்தில் பயன்படுத்தினால் அந்த அந்த பிரதமர்கள் ஆளும் காலத்தில் அந்த அந்த பிரதமர்களின் உருவத்தை சினிமாக்களை விடியோக்களை பெருமதிப்புடைய இந்திய நாட்டின் பணத்தில் பார்க்கலாம் .

மேலும் நதி நீர் இணைப்பு போன்ற மாபெரும் திட்டங்களை செயல்படுத்தி விட்டு இப்படி போட்டுக் கொண்டால் கூட நாம் திருப்தி பெறலாம்.அல்லது இப்படி போட்டுக் கொண்டதன் தண்டனையாக இவர் நதி நீர் இணைப்பு பணியை இவர் காலத்துள் செய்து முடித்தாலும் ஏற்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டு சும்மா இவர் பாட்டுக்கு இவரது அம்மா க்யூவில் நின்று பணம் வாங்குகிறார் என வேடிக்கை காட்டியபடி, இவரது மனைவியை யார் என்றே தெரியாமல் ஒதுக்கி விட்டு நாட்டின் மாபெரும் தலைவராக சரித்திரம் சொல்ல வேண்டும் என இப்படி ஏதாவது செய்து கொண்டிருந்தால் சுயஸ்துதி பாடிக் கொண்டிருந்தால் அவமானம் அடையப் போவது உறுதி.

கர்வம், அகந்தை, என்றெல்லாம் சொல்வார்கள். தம் புகழை தாமே பாடிக் கொள்ளக் கூடாது என்பது இந்திய நாட்டின் எழுதப்படாத விதி. அதை மோடி செய்து மறுபடியும் ஒரு கெட்ட பெயரை ஈட்டி இருக்கிறார். காலம் அவரை மன்னிக்கிறதா, தண்டிக்கிறதா பொறுத்திருந்து பார்ப்போம்.

அம்மாவும் மோடியும் இது போன்ற விஷயங்களில் ஒன்றாகவே ஒற்றுமையுடனேயே இருக்கிறார்கள் என்பதுதான் நமது ஆள்வோரைப் பற்றி நாம் அறிய முடியும் சேதி.

பாராளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி வரவழைக்கப்பட்டு இது பற்றி எல்லாம் விவாதம் நடத்தப் பட வேண்டும் அது நல்ல நாட்டுக்கு நல்லது.தனிமனித துதி என்றுமே சர்வாதிகாரத்துக்கு வழி வகுத்தது போல அது இந்திய முதலாளித்துவ நாட்டுக்கும் நல்லதல்ல..
Image result for modi speaks in 2000 rupee note in the place of mangalyaan satellite

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நான் பார்த்தேன். அந்த நோட்டின் பின்புற மோடியின் உருவப் படத்துடனான பேசும் மோஷன் பிக்சரை 2000 ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ள மங்கள்யான் செயற்கைக் கோள் உள்ள இடத்தில் செல்பேசியை வைத்துப் பார்த்தால் அந்த விந்தை தெரிந்தது. தொழில் நுட்பம் என்ன என்று மேலும் அறிய அவா, அது பற்றி வேறு எவராவது விளக்கிக் கூறினால் மேலும் தெரிந்து கொள்வேன்.

No comments:

Post a Comment